BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Wednesday, June 26, 2013

மைக்ரோவேவ் மில்க் ஸ்விட்(Microwave Milk Sweet)




தேவையானவை
கண்டென்ஸ்ட் மில்க் 1 டின்
மில்க் பௌடர் 1 கப்
பட்டர் 1 ஸ்டிக் (ரூம் டெம்ப்ரேச்சர்)
மைக்ரோவேவ் சேவ்டி பௌல்
ஸ்பூன்
பதாம் அல்லது பிஸ்தா 1/2 ஸ்பூன்
செய்முறை

மைக்ரோவேவ் பௌலில் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மைக்ரோவேவில்
மொத்தம் 5 நிமிடங்கள் வைக்கவும்.
ஒவ்வொரு நிமிடமும் முடிந்து வெளியில் எடுத்து மறுபடியும் கிளறி வைத்து எடுக்கவும்.
ஒரு ப்ளேட்டில் பட்டர் தடவி அதில் இந்த கலவயயை கொட்டி பதாம்,பிஸ்தா தூவி ஒரே சீராக தடவி விரும்பிய ஷேப்பில் வெட்டவும்
இது எளிதில் செய்து அசத்தலாம்.
-vijisvegkitchen-

சுயான் செய்முறை



அப்பம்



தேவையானவை


கோதுமை மாவு 1 கப்
அரிசி மாவு 1 தே.க
வாழைபழம் 1
ஏலத்தூள் 1/2 தே.க
வெல்லம் 1 கப் (தூளாக்கியது)
எண்ணெய் பொரிக்க

செய்முறை


பாத்திரத்தில் வாழைபழத்தை தோலெடுத்து நன்றாக மாஷரால்
அல்லது முள்கரண்டியால மசிக்கவும்.அதே பாத்திரத்தில் மாவு
வகைகளை போடவும்.ஏலத்துளையும் சேர்க்கவும்.
தூளாக்கிய வெல்லத்தை ஒரு பௌலில் கொஞ்சமா தண்னிர்
விட்டு அது கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து கொதிக்கவிடவும். 
கெட்டியானதும் அதை இந்த மாவுக்லவையில் ஊற்றி நன்றாக 
முள்க்ரண்டியால் கலக்கவும்.
கடாய் அல்லது குழிபணியார சட்டியில் எண்ணெய் விட்டு அது
சூடானதும் ஒரு பெரிய ஸ்பூனால் மாவை எடுத்து ஊற்றவும்.
மிதமான தீயில் வைத்து சூடக்கவும். 
பொன்னிறமானதும் திருப்பி போட்டு மறுபக்கமும் பொன்னிறமானதும்எடுக்கவும்.
இந்த அப்பம் மிகவும் டேஸ்டியாகவும், சாப்டாகவும் சாப்பிட நன்றாக இருக்கும்.
இதில் நல்ல கனிந்த வாழைபழம் 2 சேர்த்தால் மேலும் மிருதுவாக இருக்கும்.
குழந்தகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவாங்க
செய்வதற்க்கு எளிது.

என்னோட 100 வது பதிவு இந்த இனிய அப்பதோடு உங்களை மேலும் இனீப்பூட்ட
எப்பவும் போல் உங்க ஒத்துழைப்போடு தொடர்கிறேன்.
நன்றி நன்றி நன்றி நன்றி ..................
என் எல்லா நணபர்களுக்கும் இதில் தொடர்கின்ற என் தள நட்புகளுக்கும்
இனைய தளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என் தள வருகையாளார்கள் எல்லொருக்கும் 100 வித இனிப்பு சமையோலோடு நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.
குறிப்பு: இந்த் இனிப்பு ஸுகர் ப்ரி+பேட் ப்ரி.இது வெல்லதில் செய்வதால் தாரளாமாக எல்லோரும் சாப்பிடலாம்.

சைனா க்ராஸ் ஆரஞ்,சாக்லேட் ஸ்வீட்ஸ்








இது இங்கு ஹாலோவின் பார்டிக்கு எங்கவீட்டில் செய்தது. எல்லா குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடாங்க.

சைனா க்ராஸ் - 1 பாக்கெட்
சாக்லேட் பௌடர் - 1 தே.க
பால் - 1 கப்
ஆரஞ் கலர் - 1/2 தே.க
பாதாம், பிஸ்தா - விரும்பினால்
உலர் தேங்காய் துருவல் - 1 தேங்காய் துருவல்

இரண்டு ப்ளேவரில் செய்தது.
1.தேங்காய் துருவல்+சாக்லேட் செய்தது
2.ஆரஞ் பேளவர்


செய்முறை

சைனா க்ராஸை ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
தண்னிரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பாத்திரத்தில் அரை கப் தண்ணிர்,பால் விட்டு குறைந்த தீயில் வைத்து
நல்ல கொதிக்க விடவும்.
கொஞ்சம் சைனா க்ராஸை கலர் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
கொதித்ததும் அதை வடிகட்டி ஒரு
ட்ரேயில் அல்லது பாத்திரத்தில் விட்டு ப்ரிட்ஜில் வைக்கவும்.
ஒரு மணிநேரம் கழிந்து விரும்பிய வடிவில் கட் செய்து சாப்பிடவும்.
இது கஸ்டர்டில் போட்டும் சாப்பிடலாம்.

மீதீயூள்ள சைனா க்ராஸில் சாக்லேட் பௌடர்+தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும் அதில் பாதாம் பருப்பை சேர்த்து நன்றாக கலந்து சூடு ஆறியதும் ட்ரேயில் விட்டு ப்ரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம்.
உடல் சூடிற்க்கு மிக்க நல்லது.
இது என் தோழி ஜலீலா அவர்களில் குறிப்பை பார்த்து நான் சில ப்ளேவரோடு சேர்த்து செய்தது.
நீண்ட நாட்களாக செய்ய நினைத்து அது ஒரு வழியா வெற்றிகரமாக செய்து முடிச்சாச்சு.
நிங்களும் எல்லாரும் முடிந்தால் செய்து பாருங்க.
என் குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடவில்லை.
என் வீட்டிற்க்கு வந்திருந்த எல்லொரும் விரும்பி சாப்பிடார்கள்.

நன்றி ஜலீ. 

பால் பௌடர் கோகனட் லட்டு

பால் பௌடர் கோகனட் லட்டு



இன்று என் திருமனநாளுக்கு நான் செய்த இனிப்பு.
தேவையானவை

மில்க் பௌடர் - 1 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்
தேங்காய துருவல் - 2 தே.க
பால் - 2 தே.க
வெண்ணெய் - 2 தே.க
முந்திரி பருப்பு - 4
ஏலத்தூள் - 1 தே.க

செய்முறை


மைக்ரோவேவ் பௌளில் முதலில் வெண்ணெயை போட்டு உருக வைக்கவும்.
பால் பௌடர், கண்டென்ஸ்ட் மில்க்,பால்,தேங்காய துருவல் சேர்த்து 1 நிமிடம் வைக்கவும்.
வெளியில் எடுத்து போர்க்கால நன்றாக கிளறி விட்டு மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
வெளியில் எடுத்து ஏலத்தூள் சேர்த்து 1 நிமிடம் வைத்து வெளியில் எடுத்து நன்றாக கிளறி
ஆறவிடவும்.

மீதமான் சூட்டிலேயே உருண்டைகளாக பிடிக்கவும்.
எளிதில் செய்ய கூடிய ரிச்சான இனிப்பு.
-vijisvegkitchen-

புத்தாண்டு new year கேக்




ப்ளெயின் கேக்

புத்தாண்டு ஸ்பெஷல் ப்ருட்ஸ் கஸ்டர்டு & ப்ளெயின் கேக்.
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தேவையானவை
ஆல் பர்பஸ மாவு (மைதா மாவு) 1 கப்
சர்க்கரை 3/4 கப்
வெனிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்
முட்டை 2
பேக்கிங் பௌடர் 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா 1 டீஸ்பூன்
உப்பு 1 சிட்டிகை
பட்டர் 8 தே.க(1 ஸ்டிக்)
கேக் பான்
குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் - 1/2 தே.க
செய்முறை
அவனை 350 டிகிரி முற்சூடு செய்யவும்.
முதலில் மாவை சலித்து வைக்கவும் அதில் பேக்கிங் சோடா, பேக்கிங் பௌடர் சேர்க்கவும்.
ஒரு பெரிய பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நல்ல ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் ஐந்து செகண்ட்ஸ் அடிக்கவும்
இதில் வெனிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக
கலந்து ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.
அவனில் கேக் பானில் குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் தடவி
இந்த கேக் மாவு கலவையை ஊற்றி 25 ல் இருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
டூத் பிக்க்ர் அல்லது போஃக்கால் வைத்து எடுத்து ஒட்டாமல் வந்ததும் வெளியில் எடுக்கவும்.
நன்றாக ஆறியபின் ப்ராஸ்டிங் செய்யலாம்.
இங்கு ப்ளயின் கேக் தான் செய்துள்ளேன். மேலே ஸ்ப்ரிங்ள்ஸ்
தூவியும் அல்லது பொடித்த சர்க்கரையும் மேல் தூவியும் பரிமாறலாம்.
என் மகளுக்கு ப்ராஸ்டிங், ஐசிங் விரும்பாததினால் செய்யவில்லை.
இது டி கேக்காகவும், இதை சாப்பிடலாம்.
விரும்பினால் சாக்லேட் ப்ராஸ்டிங், ஐஸிங், க்ரிம் சேர்த்தும் சாப்பிடலாம்

மாங்கோ பை- லீப் வருட டெசர்ட்














தேவையானவை

மாம்பழ கூழ் - 1 டின் ரெடெமேட் ( வீட்டிலும் மாம்பழதை கட் செய்து
அந்த சதை பகுதியை வழித்தெடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
பால் - 2 பெரிய கப் (புஃல் பேட்)
சர்க்கரை - 1/2 கப்
ஜெல்லடின் - அன் ப்ளேவர்ட் 1 பாக்கெட்
க்ரஸ்டு - 1 (க்ராம் க்ராக்கர்ஸ் க்ரஸ்டு) ரெடிமேடாக கிடைக்கும்
அலுமினியம் ட்ரே




செய்முறை

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி குறைந்த தீயில் வைத்து லேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது மாம்பழ கலவையை அதில் ஊற்றி ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும். வேற ஒரு பாத்திரத்தில் தண்ணியை விட்டு லேசாக வார்ம் செய்து அதில் ஜெல்லடினை போட்டு போர்க்கால நல்ல மிக்ஸ் செய்து அதையும் மாம்பழ கலவையோடு சேர்த்து நன்றாக கிளறி விட்டு அதில் சர்க்க்ரையை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
நல்ல கொஞ்சம் கொதிக்கும் போது அடுப்பை அணக்கவும், நல்ல க்ளேஸ்டாக தெரியும்.
இந்த கலவையை க்ரஸ்ட் இருக்கும் ட்ரேயில் ஊற்றி ப்ரிஸரில் 3 மணிநேரம் வைக்கவும்
பின் அதை எடுத்து பிஸ்ஸா கட் செய்வது போல் செய்து டெசஸ்ட்டாக பரிமாறவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு டெசர்ட்.
பெரியவர்களை கேட்கவே வேண்டாம் உடனே காலி செய்திடுவாங்க.

பிறந்தநாள் இனிப்பு பைனாப்பிள் வீப்

































இன்று என் பிறந்தநாளுக்கு நான் செய்த இனிப்பு, இன்று வெளியில் லன்ஞ்க்கு ஓலிவ் கார்டன்+கோவில் போய் வந்து மீதியை அடுத்தபதிவில் சந்திக்கிறேன். எல்லாரும் வந்து இனிப்பை பார்த்து நிங்களும் செய்விங்க என்று நம்புகிறேன்.நேரில் வருகிறவர்களுக்கு நிறையவும், வராதவர்களுக்கு அவசியம் பார்சல் உண்டு. எல்லாரும் ஹேப்பி தானே.வாங்கோ வாங்கோ.




தேவையானவை

பைனாப்பிள் துண்டுகள் - 1கப்
கூல் வீப் - 1
மில்க்மெய்ட் - 1 டின்
பாதாம், அக்ரூட் - 1 தே.க

செய்முறை

ஒரு பெரியா கேஸ்ரோல் அல்லது நல்ல ப்ரிஜரில் வைக்ககூடிய சேப் பௌல் அதில் கூல் வீப்+பைனாப்பிள் துண்டுகள் (மிக மிக பொடியாக அரிந்தது, முடிந்தால் மிக்ஸியில் போட்டு ஒரு சாப் செய்தது)மில்க் மெய்ட் எல்லாவற்றையும் போட்டு நன்றாக போர்க்கால் கிளறிவிட்டு அதன் மேல் உலர் பருப்புகள் போட்டு அலங்கரித்து ப்ரிஜரில் 3 மணி நேரம் வைத்து பரிமாறுவதற்க்கு முன் ப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து சாப்பிடவும். விநாடிகளில் காலியாகிவிடும்.

எளிதில் அடுப்பே இல்லாமல் செய்து அசத்திவிடகூடிய இனிப்பு.
-vijisvegkitchen.-

க்ரான்பெர்ரி ஊறுகாய்(Cranberry Pickle)


க்ரான்பெர்ரி ஊறுகாய் தேவையானவை க்ரான்பெர்ரி காய்கள் 1 கப் மிளாகாய்த்தூள் ½ தே.க(காரத்திற்கேப்ப) கடுகு ¼ தே.க மஞ்சள்த்தூள் ¼ தே.க வெந்தயத்தூள் ¼ தே.க நல்லெண்ணெய் ½ தே.க பெருங்காயத்தூள் ¼ தே.க உப்பு தேவைகேற்ப்ப செய்முறை ஒரு பாத்திரத்தில் க்ரான்பெர்ரையை நன்றாக தண்ணிர் விட்டு அலசி ஒரு பேப்பர் டவலால் நன்றாக துடைத்தெடுக்கவும், அதை இரண்டாக அரியவும்.(அல்லது முழுதுமாகவும்) போடலாம். கடாயில் எண்ண்ய் விட்டு காய்ந்ததும் கடுகு போடவும், பின் வெந்தய்த்தூள், மஞ்சள்த்தூள், பெருங்காயத்தூள், மிளாகாய்த்தூள் போட்டு க்ரான்பெர்ரியையும் போடவும், நன்றாக கலந்து உப்பையும் சேர்த்து மீண்டும் கலந்துவிடவும்.இதை நல்ல ஜாடியில் அல்லது பாட்டிலில் போட்டுவைக்கவும். உடனேயும் தொட்டு சாப்பிடலாம், ஒரிரண்டு நாட்கள் கழிந்து சாப்பிட்டால் மேலும் நல்ல ஊறி ருசியும் நன்றாக இருக்கும். ப்ரிட்ஜில் வைத்தெடுத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.இதில் நிறய்ய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

செய்முறை கிட்ஸ் இட்லி மிளகாய் பொடி





தேவையானவை


வற்றல் மிளகாய் - 2
பொட்டு கடலை - 2 தே.க
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
எள் - 1 தே.க
பெருங்காயம் - 1/2 தே.க
எண்ணெய் - 1 தே.க


செய்முறை

கடாயில் எள்ளை எண்ணையில்லாமல் வெடிக்க வறுக்கவும்.
பொட்டுகடலை வாசனை வரும் வரை வறுக்கவும்.
மற்ற எல்லா பொருட்களை நல்ல பொன்நிறமாக வரும் வரை வறுக்கவும்.
கடைசியாக எண்ணெய் விட்டு பெருங்காயம், வற்றல் மிளகாய்
சேர்த்து வறுக்கவும்.
சூடு ஆறியதும் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பொடிக்கவும்.
இதை ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.
இட்லி,தோசை ஊத்தப்பம்,பொடி தோசை எல்லாவற்றிக்கும் தொட்டு 
-vijisvegkitchen-

நெல்லிக்காய் தொக்கு





  
நெல்லிக்காய தொக்கு

தேவையானவை

நெல்லிக்காய்               5 பெரிது  

மிளகாயத்தூள்             ½ தே.க            

மஞ்சள் தூள்               ¼ தே.க

வெந்தயத்தூள்              ¼ தே.க

நல்லெண்னெய்             ½ தே.க

பெருங்காயத்தூள்           ¼ தே.க

செய்முறை

நெல்லிக்காயை நல்ல தண்ணிரில் கழுவி ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டு 2 கப் தண்ணிர் விட்டு வேகவிடவும்.

பத்துநிமிடம் கழிந்து நெல்லிக்காயை விரலகளாக் அமுக்கினால் வில்லைகளாக வருவது தான் சரியான பதம்.

தண்னிரை நல்ல வடிகட்டி எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பெருங்காயத்துள், கடுகு,மஞ்சள் தூள், வெந்தயத்தூள்(ட்ரை ரோஸ்ட்) செய்து வைக்கவும் அதையும் இதனுடன் சேர்த்து வேகவைத்துள்ள நெல்லிக்காயை கொட்டைய எடுத்து அதன் துண்டுகளை சேர்த்து (மேலும் வேண்டுமானல் கொஞ்சம் உப்பு )சேர்த்து நன்றாக வதக்கி மேலும் அரை சிட்டிகை எண்ணெய் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போக வதக்கி எடுக்கவும். இதில் எல்லா வகை சாததிற்க்கும் மேட்சிங்க் ஊறுக்காய். ஹெல்தி ஊறுகாய்.    

ஈஸியான... காளான் சூப்

அனைவருக்குமே சூப் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக வீட்டில் காய்கறி சூப் மட்டும் தான் செய்வோம். மேலும் வேறு ஏதாவது வித்தியாசமான சூப் சாப்பிட நினைத்தால், கடைக்கு தான் செல்வோம். ஆனால் வீட்டிலேயே அனைத்து வகையான சூப்புகளையும் எளிதில் செய்யலாம். மேலும் சூப் டயட் மேற்கொள்வோருக்கு நல்ல ஒரு ஸ்நாக்ஸ்.

அந்த வகையில் இப்போது காளான் சூப்பை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்ப்போம்.





தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
புதினா மற்றும் மல்லி - சிறிது (நறுக்கியது)
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி, அடுப்பில் வைத்து நீரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பொடியாக நறுக்கிய காளானை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடித்து காளானை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து புதினா மற்றும் மல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து கிளற வேண்டும்.

பின்பு மீதமுள்ள சோள மாவு மற்றும் உப்பை, தேவையான அளவு தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு வேக வைத்துள்ள காளானை அத்துடன் சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான காளான் சூப் ரெடி!!! இதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாறினால் சூப்பராக இருக்கும்.

சுவையான... பன்னீர் குல்ச்சா

காலை வேளையில் சாதாரண சப்பாத்திகளை செய்து போர் அடித்திருந்தால், அவர்களுக்காக சூப்பரான சுவையிலும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும் ஒரு வகையான சப்பாத்தி போன்று இருக்கும் குல்ச்சாக்களை செய்யலாம். அதிலும் இந்த பன்னீர் குல்ச்சா செய்வது மிகவும் எளிது. குறிப்பாக இத்தகைய குல்ச்சாக்களை ஹோட்டலில் மட்டும் தான் சாப்பிட்டிருப்போம்.

ஆனால் அந்த குல்ச்சாக்களை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இப்போது குல்ச்சாக்களில் மிகவும் பிரபலமான பன்னீர் குல்ச்சாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதை ட்ரை செய்து பாருங்கள்.




தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப்
வெதுவெதுப்பான பால் - 1/2 கப்
தயிர் - 1/3 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எள் - 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்

 உள்ளே வைப்பதற்கு...

பன்னீர் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 2 (தட்டியது)
பச்சை மிளகாய் - 3-4 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அத்துடன் தயிர், பால் சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

வேண்டுமெனில் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு அதனை 2 மணிநேரம் ஈரத்துணியால் மூடி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

2 மணிநேரம் ஆனப் பின்பு, மீண்டும் அதனை பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு சிறிய பௌலில் உள்ளே வைப்பதற்கு என்று குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் உருட்டு வைத்துள்ள மைதா உருண்டைகளை சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவே பன்னீர் கலவையை சிறிது வைத்து மடித்து, மீண்டும் அதனை சப்பாத்திகளாக தேய்க்க வேண்டும்.

அடுத்து ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள குல்ச்சாக்களை போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி லேசான பொன்னிறத்தில் வந்ததும், எடுக்க வேண்டும்.

இதேப் போல் அனைத்து மைதா உருண்டைகளையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான பன்னீர் குல்ச்சா ரெடி!!!

இதனை மசாலாவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
-tamilboldsky-

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓட்ஸ் மில்க் ஷேக்

இதுவரை எத்தனையோ மில்க் ஷேக் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஓட்ஸ் மில்க் ஷேக் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், ஓட்ஸை வைத்து வித்தியாசமான சுவையில் மில்க் ஷேக் செய்யலாம். அதிலும் ஓட்ஸ் உடன், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து மில்க் ஷேக் செய்தால், சூப்பராக இருக்கும்.

இப்போது அந்த ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓட்ஸ் மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!





தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி - 10-12
வறுத்த ஓட்ஸ் - 1/4 கப்
குளிர்ந்த பால் - 1 கப்
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஸ்ட்ராபெர்ரியை கழுவி, இலையை நீக்கிவிட்டு, நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் பிளெண்டர்/மிக்ஸியில் வறுத்த ஓட்ஸ், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, 1-2 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சூப்பரான ஸ்ட்ராபெர்ரி ஓட்ஸ் மில்க் ஷேக் ரெடி!!!

பீட்ரூட் பனீர் சாலட்

செய்முறை அவரைக்காய் பொரியல்

அவரைக்காய் அனைவருக்குமே மிகவும் பிடித்த காய்கறிகளுள் ஒன்று. அதிலும் அவரைக்காயை பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். பெரும்பாலும் இந்த பொரியல் தென்னிந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது.

இப்போது அந்த அவரைக்காய் பொரியலை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!!




தேவையான பொருட்கள்:

அவரைக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (தட்டியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
முதலில் அவரைக்காயை கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு நறுக்கிய அவரைக்காயை சேர்த்து, 2 நிமிடம் கிளறி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து தண்ணீர் நன்கு சுண்டும் வரை வேக வைக்க வேண்டும்.

தண்ணீரானது முற்றிலும் சுண்டியவுடன், துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி!!!
-tamilboldsky-

காளான் டோஸ்ட்

பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஏதேனும் ரெசிபி செய்து கொடுக்க வேண்டுமெனில், அதற்கு காளான் டோஸ்ட் சரியானதாக இருக்கும். அதிலும் இது ஸ்நாக்ஸ் போன்று இருப்பதோடு, பசியோடு வரும் குழந்தைகளின் பசியை போக்கும் சிறந்த மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபியாகவும் இருக்கும்.
மேலும் காளான் டோஸ்ட் செய்வது என்பது மிகவும் எளிது. இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போம்.





தேவையான பொருட்கள்
பட்டன் காளான் - 8 (நறுக்கியது)
பிரட் துண்டுகள் - 8
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 பற்கள் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீஸ் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து, லேசாக உப்பு தூவி பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள காளான்களை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு க்ரீம் மற்றும் சீஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அதே சமயத்தில் மற்றொரு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும், பிரட் துண்டுகளை கல்லில் போட்டு, பிரட்டின் மேல் நெய் சேர்த்து முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் தோசைக்கல்லில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பிரட் துண்டின் மேல், காளான் கலவையை கொஞ்சமாக வைத்து, மற்றொரு பிரட்டைக் கொண்டு மூடி, பரிமாற வேண்டும்.
இப்போது சுவையான காளான் டோஸ்ட் ரெடி!!!

Tuesday, June 25, 2013

வித்தியாசமான... ஜஃப்ரானி புலாவ்


இதுவரை எத்தனையோ கலவை சாதத்தைப் பார்த்திருப்போம். ஆனால் சற்று இனிப்பாகவும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும் ஜஃப்ரானி புலாவ் ரெசிபியை பற்றி பார்த்திருக்கமாட்டோம். பொதுவாக புலாவ் என்றால் லக்னோ தான் ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் அங்கு தான் பலவகையான சுவையில் புலாவ் ஆனது தயாரிக்கப்படும்.
இப்போது அவற்றில் ஒன்றாக ஜஃப்ரானி புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து செய்து பாருங்கள்.



தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
பால் - 1/4 கப்
குங்குமப்பூ - 1 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பாதாம் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாலில் குங்குமப்பூவை சேர்த்து, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், அரிசியைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் குங்குமப்பூ பால், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 15 நிமிடம் மூடி வேக வைக்க வேண்டும்.
அதே சமயத்தில் மற்றொரு அடுப்பில் சிறிய வாணலியை வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின் சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு, சர்க்கரையானது கரைந்ததும், முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை சேர்த்து வதக்கி இறக்கி விட வேண்டும்.
சாதமானது வெந்ததும், அதில் ஏலக்காய் பொடி தூவி கிளறி, வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கி விட வேண்டும்.
இப்போது வித்தியாசமான ஜஃப்ரானி புலாவ் ரெடி!!! இதன் மேல் புதினாவை தூவி பரிமாற வேண்டும்.
 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX