BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Wednesday, May 7, 2014

சோள ரவா கிச்சடி


தேவையானப்பொருட்கள்:

சோள ரவா - 1 கப்
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - ஒரு சிறு துண்டு
இலவங்கம் - 2
பட்டை இலை - சிறு துண்டு
ஏலக்காய் - 1
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தண்ணீர் - 3 கப்

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் சோள ரவாவைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் வரை வறுத்தெடுக்கவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கேரட், தக்காளி ஆகியவற்றை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், அதில் சோம்பு, பட்டை, இலவங்கம், பட்டை இலை, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.  வெங்காயம் சற்று வதங்கியவுடன், கேரட் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும்.  அதன் பின் தக்காளியைச் சேர்த்துக் கிளறி விட்டு, 3 கப் தண்ணீரை விட்டு, உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள சோளரவாவைக் கொட்டிக் கிளறி விடவும். வாணலியை மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும். அவ்வப் பொழுது மூடியைத் திறந்துக் கிளறி விட்டு, தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்திருந்துக் கிளறி, இறக்கி வைக்கவும்.

சூடாக சடினியுடன் பரிமாறவும்.

பின்குறிப்பு:  இதில் பச்சை பட்டாணி, பீன்ஸ், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு போன்ற காய்களையும் சேர்த்து செய்யலாம்.



முகநூல் 

Saturday, April 5, 2014

***சமையலில் செய்யக்கூடாதவை !!!

***சமையலில் செய்யக்கூடாதவை !!!
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
....செய்ய வேண்டியவை....
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும் with - Ganesharajah Krishnasamy

Tuesday, March 25, 2014

தேங்காய் பால் - அன்னாசி ஜூஸ்.

தேங்காய் பால் - அன்னாசி ஜூஸ்

தேவையான பொருட்கள் :

அன்னாசி பழம் - பாதி 
ஐஸ் கட்டிகள் – 5 
தேங்காய் பால் – 1 கப் 
தேன் – ருசிக்கு ஏற்ப 

செய்முறை 

• அன்னாசி பழத்தின் தோல் நீக்கி துண்டுகளாக வெட்டவும். 

• வெட்டிய அன்னாசி பழத்துடன் ஐஸ்கட்டி, தேன், 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்சியில் அடித்து வடிக்கட்டி மீண்டும் மிக்சியில் இட்டு தேங்காய் பால் சேர்த்து நல்ல நுரை பொங்க அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி குடிக்கவும். 

• சூப்பரான தேங்காய் பால் - அன்னாசி ஜூஸ் ரெடி. 

• அன்னாசி பழம் சூடு என்று குடிக்க பயப்படுபவர்கள் இப்படி தேங்காய் பால் சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கவும். சளியை கூட கட்டுபடுத்தும்.

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX