BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

From our Blog

Thursday, November 7, 2013

சமையல் குறிப்புகள் ! பொடி வகைகள்!!


கூட்டுப் பொடி
இந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் கூட்டு செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனியாக வறுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு - 100கிராம்(1/2 டம்ளர்), மிளகு - 3 மேசைக்கரண்டி, சீரகம் - 3 மேசைக்கரண்டி, தனியா - 1கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 15. செய்முறை எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். வறுத்த பருப்பு, சீரகம், மிளகாய், மிளகு, தனியா எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும். கூட்டு கொதித்தபின் இறக்குமுன் 1 மேசைக்கரண்டி தூவி கலந்து இறக்கவும். ரசத்திற்கும் இறக்குமுன் 1 தேக்கரண்டி போட்டு இறக்கினால் ரசம் வாசனையாக இருக்கும். ------------------------------------------------------------------------------------------------- ரச பொடி தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் - -----------ஒரு கப் தனியா - ----------- 3 கப் துவரம் பருப்பு - --------- 1/2கப் மிளகு --------- அரை கப் சீரகம் - ------------ஒன்றறை கப் கட்டிவிரளி மஞ்சள் - 4 செய்முறை விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். தனியா, துவரம் பருப்பு,மிளகு, சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வறுக்க வேண்டாம் வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும். எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும். ----------------------------------------------------------------------------
வேர்க்கடலை பொடி
தேவையான பொருட்கள் வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப் பொட்டுக்கடலை - 1 கப் வறுத்த எள் (வெள்ளை அல்லது கறுப்பு) - 1/2 கப் பெருங்காயம் - 1 துண்டு வறுத்த கசகசா - 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் வற்றல் - 6 அல்லது 8 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1/2 டீஸ்பூன் செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும். மிளகாய் வற்றலை வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை, எள், கசகசா, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், பொட்டுக்கடலை எல்லாவற்றையும் பொடிக்கவும். சூடான சாதத்தில் இந்தப்பொடியைப்போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். ----------------------------------------------------------------------------
சீரகப் பொடி
தேவையான பொருட்கள் சீரகம் -- 100 கிராம் இஞ்சி -- 50 கிராம் எலுமிச்சம் பழம் -- 15 (அ) 20 ஏலக்காய் -- 10 கிராம் (தோல் நீக்கியது) சீனா கல்கண்டு -- 100 கிராம் செய்முறை இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி 'ஜூஸ்' எடுக்கவேண்டும். ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும். சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக்கொள்ளவும்.இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும்(24 மணி நேரம்). மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊறவைக்கவேண்டும். இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ளவேண்டும். உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி / உரலில் போட்டு அரைத்து எடுக்கவும். இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும். சீரகப்பொடி தயார். குறிப்பு: வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. மேலும் பித்தம், ஏப்பம், தலை சுற்றல் போன்றவைகளும் சரிப்படும். இதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேவையான சமயத்தில் சாப்பிட வேண்டும். --------------------------------------------------------------------------
சாம்பார் பொடி -- ( 10 பேருக்கு )
தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் -- 10 கிராம் கொத்தமல்லி -- 20 கிராம் வெந்தயம் -- 1 டீஸ்பூன் கடலை பருப்பு -- 1 டீஸ்பூன் பெருங்காயம் -- 1 துண்டு கறிவேப்பிலை -- 2 இனுக்கு தேங்காய் எண்ணைய் -- தே.அ செய்முறை எண்ணையை சூடாக்கி கடலைபருப்பு மற்றும் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்த்து கிளறவும். கடலை பருப்பு சிவப்பு நிறமானதும் கொத்தமல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெந்தயம் பொரியும் போது கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கிய பின் தூளாக்கவும். இது உடனடியாக செய்யக்கூடிய சாம்பார் பொடி. நல்ல ருசியான காரமான சாம்பார் பொடி. -----------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி - 3
தேவையான பொருட்கள் இளசான கறிவேப்பிலை - 2 கப் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் புளி - சுண்டைக்காய் அளவு. உப்பு - தேவையான அளவு உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன் செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும் ------------------------------------------------------------------
எள்ளு பொடி - 2
தேவையான பொருட்கள் கருப்பு எள்ளு - 100g காய்ந்த மிளகாய் (மிளகாய் வற்றல்) - 15 பூண்டு - 10 புளி - நெல்லிக்காய் அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை முதலில் எள்ளை எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்தெடுக்க வேண்டும். எள்ளு நன்கு பொரிய வேண்டும். மிளகாயை நன்கு வறுக்க வேண்டும். ஆரியபின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். குறிப்பு: இந்த பொடியை எண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம். --------------------------------------------------------------------------
இட்லி / தோசை பொடி --முறை - 2
தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு -- 1 கப் வத்தல் -- 1 கப் பெருங்காயத்தூள் -- 1 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை -- 2 இனுக்கு உப்பு -- தே.அ வெள்ளை எள் -- 2 ஸ்பூன் (வறுத்தது) செய்முறை வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு போட்டு 1 நிமிடம் வறுக்கவும். பின் வத்தல் , பெருங்காயம் , கறிவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் உப்பு, எள் சேர்த்து அரைக்கவும். காரமான ருசியான இட்லி பொடி ரெடி. ------------------------------------------------------------------
இட்லி பொடி( குழந்தை களுக்கு)
தேவையான பொருட்கள் உளுந்து பருப்பு - அரை கப் கடலை பருப்பு - அரை கப் மிளகு - ஒரு தேக்கரண்டி வேர்கடலை - ஒரு மேசை கரண்டி (வருத்தது) வெள்ளை எள் - ஒரு தேக்கரன்டி (வறுத்தது) கருவேப்பிளை - கால் கப் உப்பு - அரை தேக்காரண்டி (அ) தேவையான அளவு பூண்டு - ஒன்று செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொடுட்களியும் தனித்தனியாக வறுக்கவும். வறுத்து ஆறவைக்கவும். ஆறியது மிக்ஸியில் திரித்து ஒரு ஏர் டைட் கன்டைனரில் போட்டு வைக்கவும். இட்லிஅயி பொடியாக நருக்கி இந்த பொடியை தூவி நெயை சூடு பண்ணி ஊற்றி கிளறி கொடுக்கவும். உப்புயும் வருக்கனும்.இல்லை எலா பொருளையும் வருத்து விட்டு அந்த சூடு வானலியில் கடைசீயாக போட்டாலும் சரி. குறிப்பு: ஒரே ஒரு இட்லி சாப்பிட்டாலும் இதில் எல்லா சத்தும் அடங்கியுள்ளது. பருப்பு வகைகள், பூண்டு கேஸுக்கு, நெய் ஆகா கம கமக்கும், கருவேப்பிலை தலை முடி சொட்டையாகமல் இருக்கும் சிறுவயதிலிருந்தே சேர்த்து விடுங்கள்.கர கரப்பாக திரியுங்கள் அப்ப தான் சாப்பிடும் போது கடுக்கு மொடுக்கு என்று இருக்கும் ---------------------------------------------------------------------
கறிப் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் உளுந்து - 2 கப் கடலை பருப்பு - 2 கப் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிது செய்முறை வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும் ------------------------------------------------------------------
வேர்க்கடலைப் பொடி
தேவையான பொருட்கள் வறுத்த வேர்க்கடலை-நூறு கிராம் கடலைப்பருப்பு-அரை ஆழாக்கு உளுத்தம்பருப்பு-அரை ஆழாக்கு சிவப்பு மிளகாய்-எட்டு (அவரவர் காரத்தைப் பொறுத்து கூட/குறைய) பெருங்காயம்- புளியங்கொட்டை அளவு உப்பு, வறுக்க எண்ணெய் செய்முறை வேர்க்ககடலையை தோல் நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தைப் பொரிக்கவும். அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவறைப் போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும். பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியில் வேர்க்கடலை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சூடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை பிசைந்து சாப்பிடலாம். குறிப்பு: வேர்க்கடலை சேர்த்து அதிகமாக அரைக்கக்கூடாது. கரகரப்பாக இருக்க வேண்டும். --------------------------------------------------------------------------
கொள்ளு பொடி -1
இந்த பொடியினை சாப்பிட உடல் எடை குறையும். தேவையான பொருட்கள் கொள்ளு - 1 கப் காய்ந்த மிளகாய் - 6 பூண்டு - 2 பல் தோலுடன்(விரும்பினால்) பெருங்காயம் தூள் - 1/4 தே.கரண்டி உப்பு - 1 தே.கரண்டி செய்முறை ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். பின் கொள்ளினை போட்டு நன்றாக வறுக்கவும். சிறிது நேரம் ஆறவைத்த பிறகு கொள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும். கடைசியில் பூண்டு , பெருங்காயம் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் அரைத்து கொள்ளவும். இப்பொழுது சுவையான கொள்ளு பொடி ரெடி. இதனை இட்லி, தோசை, சாத்த்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் ----------------------------------------------------------------
கொள்ளு பொடி -2
தேவையான பொருட்கள் கொள்ளு - கால் கப் காஞ்ச மிளகாய் - நன்கு பெருங்கய்ம் - ஒரு பின்ச் உப்பு - ஒரு பின்ச். செய்முறை எல்லா பொருட்களையும் எண்ணையில்லாமல் வெரும் வானலியில் வருத்து ஆறவைத்து கரகரப்பாக திரிக்கவும் குறிப்பு: உடல் மெலிய விருப்புவர்கள் இநத கொள்ளை வாங்கி வேகவைத்து அதேல்லாம் பெரிய வேலை, அதற்கு பதில் இந்தமாதிரி திரித்து வைத்து கொன்டால் சாத்தைல் போட்டு பிசைந்து கொண்டு மேலே என்ன குழம்போ அதுவும் சேர்த்து சாப்பிடுங்கள்.கொள்ளு ரொம்ப சூடு பார்த்து சாபிடுங்கள் -------------------------------------------------------------------
பிஸி பேளா பாத் பொடி
தேவையான பொருட்கள் பொடி தயாரிக்க கொப்பரை தேஙகாய் துருவல் - இரண்டு கப் பொட்டு கடலை - முக்கால் கப் கடலை பருப்பு - முக்கால் கப் தனியா - முக்கால் கப் பெருங்காயம் - இரண்டு துண்டு காஞ்ச மிளகாய் - இருபது கிராம்பு - பத்து பட்டை - நான்கு இரன்டு அங்குல துண்டு வெந்தயம் - ஒரு தேக்கரண்டி கசகசா - ஒரு தேக்கரண்டி ஏலகாய் - பத்து செய்முறை அனைத்தையும் வருத்து பொடித்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் இரண்டு மாதத்திற்கு கெடாது. குறிப்பு: இதில் கச கசா, ஏலம் சில பேர் சேர்க்கமாட்டார்கள் தேவையில்லை என்றால் சேர்க்கவேண்டாம் ---------------------------------------------------------------
ஜலீலா'ஸ் இட்லி பொடி
தேவையான பொருட்கள் கடலை பருப்பு - ஒரு டம்ளர் உளுத்தம் பருப்பு - ஒரு டம்ளர் காஞ்ச மிளகாய் - கால் கப் எள் - இரண்டு மேசை கரண்டி வருத்த வேர்கடலை - கால் கப் கருவேப்பிலை - கைக்கு ஒரு பிடி உப்பு - ஒரு தேக்கரண்டி பெருங்காய பொடி - கால் தேக்கரண்டி (அ) ஒரு சிறிய துண்டு செய்முறை முதலில் கடலை பருப்பு ,உலுத்தம் பருப்பு சிவற வருக்கனும். பிரகு காஞ்சமிளகாயை போட்டு வருக்கனும் இரு நிமிடம் வருத்தால் போதும். (இப்போது ஹச் ஹச் தும்மல வரும் தளிக்கா) பிறகு வேர்கடலை,எள் உப்பு, கருவேப்பிலை ஆய்ந்து கழிவு தண்ணீர்வடித்து தனியாக வானலியில் வதக்கி தண்ணிர் முழுவதும் வற்றியதும் கடலை பருப்பு கலவையுடன் சேர்த்து ஒரு முறை வருக்கனும். காலையில் செய்தால் அப்ப்டியே ஆறவிடனும். ஆறியதும் மிக்சியில் முதலில் மேலோடு உள்ள காஞ்ச மிளகாய் போட்டு கொஞ்ச பருப்பு போட்டு நல்ல திரிக்கனும், கொஞ்ச விட்டு விட்டு திரிக்கனும். பாதியை மையாகவும். பாதி பருப்பை கொர கொரப்பாகவும் திரித்து இரன்டையும் ஒன்றாக கலக்கனும். பிறகு சூடாக இருக்கும் நல்ல ஆறவிடனும். குறிப்பு: பிறகு நல்ல காய்ந்த டப்பாவில் போட்டு வைக்கவும். எத்தனை நாள் ஆனாலும் கொடாது எடுக்கும் போது ஈரக்கை போடக்கூடாது. --------------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் -- 5 கிராம் கொத்தமல்லி -- 10 கிராம் மிளகு -- 8 கிராம் சீரகம் -- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு -- 5 கிராம் கறிவேப்பிலை -- 2 இனுக்கு எண்ணைய் -- தேவையான அளவு பெருங்காயம் -- சிறிதளவு செய்முறை எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி. ---------------------------------------------------------------------------
கரம் மசாலா பொடி
தேவையான பொருட்கள் பட்டை - ஐம்பது கிராம் லவங்கம் - இருபத்தைந்து கிராம் ஏலக்காய் - இருபத்தைந்து கிராமில் பாதி செய்முறை எல்லா வற்றையும் மிக்சியில் பொடித்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும். மட்டன் பிரை,சிக்கன் பிரை மற்றும் பல அயிட்டங்களுக்கு இதை கால் தேக்கரண்டி சேர்த்து கொண்டால் நல்ல வாசமாக இருக்கும். ----------------------------------------------------------------------
சத்துமாவு பொடி (குழந்தைகளுக்கு)
ஏர் உழும் விவசாயி வெரும் ஒரு கப் கேப்ப கஞ்சி குடித்துவிட்டு தான் நிலத்தை உழுகிறான். அவ்வளவு பெரிய நிலத்தை உழவே அது ஒரு சத்தான பாணமாக இருக்கு, ஆனால் நீங்கள் இதில் இத்தனை பொருள் சேர்ப்பதால் இன்னும் கூடுதல் தெம்பு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதை குடிக்கலாம்.வேலைக்கு போகிறவர்கள் இது நல்ல கட்டியா காய்ச்சி இரண்டு கப் குடித்து விட்டு போகலாம்.நல்ல பசி தாங்கும். தேவையான பொருட்கள் கேழ்வரகு - அரை கிலோ சம்பா கோதுமை - ஐம்பது கிராம் புழுங்கல் அரிசி - ஐம்பது கிராம் பாதம் - ஐம்பது கிராம் ஜவ்வரிசி - இருபத்தைந்து கிராம் உடைத்த கடலை - இருபத்தைந்து கிராம் செய்முறை கேழ்வரகு,கோதுமை,அரிசி,உடைத்த கடலை,ஜவ்வரிசி,எல்லாம் தனிதனியாக லேச கை பொருக்கும் அளவுக்கு வருத்து ஆறவைக்க வேண்டும். ஆறியதும் மிஷினில் கொடுத்து திரித்து மறுபடியும் ஆறவைத்து ஒரு நல்ல ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைக்கவேண்டும். குறிப்பு: டெய்லி ஒரு ஒரு மேசைகரண்டி எடுத்து ஒன்னறை கப் பால் + தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சி சக்கரை ஒரு சொட்டு நெய் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும் நல்ல சத்தான பாணம். இத்துடன் நீங்கள் வேறு ஏதும் சத்தான அயிட்டம் சேர்ப்பதாக இருந்தால் கூட சேர்க்கலாம் ---------------------------------------------------------------------- ரசப்பொடி (மிளகாய் இல்லாமல்) தேவையான பொருட்கள் 1. மிளகு - 100 கிராம் 2. சீரகம் - 100 கிராம் 3. தனியா - 6 தேக்கரண்டி 4. உளுந்து - 3 தேக்கரண்டி 5. கடலை பருப்பு - 3 தேக்கரண்டி செய்முறை அனைத்தையும் வெய்யிலில் காய வைத்து எடுக்கவும். கடாயில் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுத்து எடுக்கவும். ஆர வைத்து ஈரம் இல்லாத மிக்ஸி ஜாடியில் போட்டு திரித்து வைக்கவும் ------------------------------------------------------------------------
புளியோதிரை கலவை
இந்த புளியோதரை கலவை ஆபிஸ் போகும் பெண்களுக்கு காலை நேர அவசரத்திற்கு மதியவேளை சாப்பாட்டுக்கு தயாரிக்க ஈஸி, வாரத்தில் ஒரு நாள் இந்த புளியோதரை ரைஸ் நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் கல் நீக்கிய எள்(கருப்பு) - 50 கிராம் உளுத்தம்பருப்பு - 50 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் வேர்கடலை - 50 கிராம் மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன் புளி - 3 எலுமிச்சைபழத்தின் அளவு[பழைய புளி உபயோகபடுத்தினால் நல்லது] கடுகு - 1டீஸ் ஸ்பூன் வெந்தயம் - 1டீஸ் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ் ஸ்பூன் நல்லமிளகு - 1 டீஸ் ஸ்பூன் (முழு மிளகு) பெருங்காய்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன் கறிவேப்பிலை - 3 கீற்று நல்லெண்ணெய் - 3/4 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை ஒரு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எள், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து பொடிசெய்து வைக்கவும். வேர்கடலையையும் லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் 1 கப் சுடுநீர் ஊற்றி ஊற வைக்கவும் வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், நல்லமிளகு, இவற்றை போட்டு தாளிக்கவும்,பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு கிண்டி, எள், உ.பருப்பு, க.பருப்பு பொடியினை போட்டு கிண்டி விடவும் அடுத்து வேர்கடலை, பெருங்காய்த்தூள் மற்றும் புளித்தண்ணீர் தேவையான அளவு உப்பு இட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும், பச்சை வாசம் போய் கலவை கெட்டியாக வரும் போது இறக்கி விடவும். கலவை ஆறிய பின் ஒரு பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும் , தேவையான நேரம் சூடான சோற்றில் போட்டு கிளறி சாப்பிடவும். --------------------------------------------------------------------------------
இஞ்சி பூண்டு பேஸ்ட்
இது சமையல் காரர்கள் பிரியாணி மற்றும் பகாறா காணாவிற்கு மற்றும் பல இஸ்லாமிய அயிட்டங்களுக்கு செய்யும் போது அரைக்கும் இஞ்சி பூண்டின் அளவு தேவையான பொருட்கள் இஞ்சி - ஒரு கிலோ பூண்டு - அரை கிலோ எண்ணை (அ) வினிகர் (அ) உப்பு - ஒரு மேசை கரண்டி செய்முறை முதலில் பூண்டை ஒரு கவரில் போட்டு சுத்தி அல்லது சின குழவியால் இடித்து கொள்ளுங்கள்.பிறகு குப்பை கொட்டும் இடத்தில் வைத்து லேசா புடைத்தால் அவ்வளவு பூண்டு குப்பையும் அதில் போய் விடும் இல்லை என்றால் வீடு முழுவது பூண்டு குப்பைதான்.. இஞ்சி தோலை சீவி விட்டு பிறகு மண் போக கழுவி பிறகு பொடியாக வெட்டனும். பூண்டையும் அரிந்து கழுவி கொள்ளுங்கள். இப்போது இரண்டையும் கொஞ்ச கொஞ்சமா தண்ணீர் தெளித்து அரைத்தெடுத்து அதில் உப்பு அல்லது வினிகர் அல்லது எண்ணை கலந்து (நல்ல கலக்கி)பாதியை ஒரு கண்டெயினரில் போட்டு பீரீஜரில் வைத்து விடுங்கள். பீரிஜரில் வைக்கும் போது முழுவது அடைத்து வைக்காதீர்கள்.வெடித்து வெளியே வந்துவிடும். மீதியை கிழே பிரிட்ஜில் வைத்து தினமும் தேவைக்கு பயன் படுத்தலாம். குறிப்பு: சில பேர் இஞ்சி பூண்டு உரிக்க சோம்பல் பட்டே நிறைய அயிட்டம் செய்யமட்டார்கள். இது டீவி பார்த்து கொண்டே செய்தால் சிரமம் இருக்காது உடனே கையை நல்ல சோப்பு போட்டு தேய்த்து கழுவி விடுங்கள் இல்லை என்றால் அவ்வளவு தான் ---------------------------------------------------------------
ரசப்பொடி
இது நான் திரிக்கும் ஸ்பெஷல் ரசப்பொடி. தேவையான பொருட்கள் தனியா - முன்று மேசை கரண்டி துவரம் பருப்பு - ஒரு மேசை கரண்டி மிளகு - ஒரு மேசை கரண்டி சீரகம் - இரண்டு மேசை கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி பெருக்காயம் - கால் தேகரண்டி (அ) ஒரு சிறிய துண்டு கருவேப்பிலை - கால் கைபிடி காஞ்ச மிளகாய் - நாலு செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் வெயிலி காய வைக்கனும் அதற்கு டைம் கிடையாது லேசா இரும்பு கிடாயில் வறத்து ஆற வைத்து விடுவேன். பிறகு காய்ந்த மிக்ஸியில் பர பரன்னு திரித்து வைத்து கொள்வேன். இது ஒரு சிறிய கண்டெய்ணரில் போட்டு வைத்தால் நாலைந்து முறை செய்ய வரும். இது கருவேப்பிலையையும் தேடி பிடிக்க தேவையில்லை. வெரும் நெய் கடுகு தாளித்து இதை போட்டு புளி தண்ணீ கரைத்து ஊற்றினால் போதுமானது. -----------------------------------------------------------------
திடீர் பூண்டு இட்லி பொடி
இட்லி பொடி இல்லாத நேரத்தில் இந்த பொடி நமக்கு கை கொடுக்கும். தேவையான பொருட்கள் பூண்டு - 10 பல் தோலுடன் காய்ந்த மிளகாய் - 5 உப்பு - 1 தே.கரண்டி செய்முறை பூண்டு , காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது பூண்டு பொடி ரெடி .இதனை நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ------------------------------------------------------------
கிட்ஸ் இட்லி பொடி
தேவையான பொருட்கள் பொட்டு கடலை ( ஓடைத்த் கடலை) - 1 கப் பூண்டு -3 பல் தோலுடன் உப்பு - 1/2 தே.கரண்டி காய்ந்த மிளகாய் - 2 பெருங்காயம் தூள் - ¼ தே.கரண்டி செய்முறை தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் பொட்டு கடலை,பூண்டு,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் தூள் , உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது சுவையான ,எளிதில் தயாரிக்க கூடிய கிட்ஸ் இட்லி பொடி ரெடி. இதனை நல்லெண்ணெய் சேர்த்து இட்லியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். -------------------------------------------------------------
சாட் மாசாலா மிக்ஸ்
தேவையான பொருட்கள் கொத்தமல்லி விதை - 4 டேபிள் ஸ்பூன் சோம்பு - 2 டேபிள் ஸ்பூன் ஓமம் - 1 டீஸ் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 கரம் மசாலா - 2 டீஸ் ஸ்பூன் நல்லமிளகாய்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன் ட்ரை மாங்காய் பவுடர் (ஆம்சூர்) - 1 டேபிள் ஸ்பூன் கல்உப்பு - 1 - 2 டேபிள் ஸ்பூன் வினிகர் - 1/2 டீஸ் ஸ்பூன் செய்முறை கொத்தமல்லி விதை, சோம்பு, ஓமம், காய்ந்தமிளகாய் இவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும் அதில் கல் உப்பையும் சேர்த்து பொடிக்கவும் கரம்மசாலாத்தூள், நல்லமிளகாய்த்தூள், ஆம்சூர் பொடி இவற்றையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து வினிகரையும் சேர்த்து அரைத்த பொடியுடன் சேர்க்கவும்.எல்லா பொடியினையும் கலந்து உப்புச் சரிப்பார்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும் ---------------------------------------------------------------------
மசாலா டீ பொடி
குளிர் காலத்துக்கு ஏற்ற டீ. தேவையான பொருட்கள் 1. மிளகு - 16 2. பட்டை - 1 இன்ச் 3. லவங்கம் - 4 4. ஏலக்காய் - 4 5. சுக்கு பொடி - 1 தேக்கரண்டி செய்முறை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைக்கவும். இதை காய்ந்த பாட்டில் ஒன்றில் போட்டு வைத்து கொண்டு, தேவையான போது வழக்கமாக டீ போடும்போது, டீ தூளோடு சேர்த்து இந்த தூள் 1/2 தேக்கரண்டி (அல்லது உங்கள் ருசிக்கு) சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும். ------------------------------------------------------------
திடீர் இட்லி மிளகாய் பொடி
இது அவசரத்துக்கு கை குடுக்கும், மிகவும் வாசமாக, சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் 1. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 2. மல்லி தூள் - 1 தேக்கரண்டி 3. பூண்டு - 3 பல் 4. உளுந்து பருப்பு - 1 தேக்கரண்டி 5. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 6. கறிவேப்பிலை - கொஞ்சம் 7. நல்லெண்ணெய் - 7 தேக்கரண்டி 8. உப்பு செய்முறை எண்ணெய் சிறிது விட்டு அதில் கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவக்க வறுத்து வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும். பின் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு கலந்து வைக்கவும். இதில் வறுத்த பருப்பு, பூண்டு, எண்ணெய் எல்லாம் கலந்தால் பொடி தயார். குறிப்பு: இது இட்லி, தோசை'கு பொருத்தமாக இருக்கும். ---------------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கும் கண்ணிற்கும் மிகவும் நல்லது. இந்த அளவில் பொடித்தால் ஒருவாரம் வரை வைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது புதிதாக பொடித்துக் கொண்டால் தான் வாசனையாக இருக்கும். தேவையான பொருட்கள் இளம் கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி, உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிது, எண்ணெய் - 1 தேக்கரண்டி, உப்பு - அரை தேக்கரண்டி. செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையை வறுத்தெடுத்து கொள்ளவும். அதே வாணலியில் மற்ற பொருட்களையும் வறுத்தெடுக்கவும். ஆறியதும், எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். குறிப்பு: இந்த பொடியை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு சாப்பிட சுவையாக இருக்கும். --------------------------------------------------------------
குழம்புப் பொடி
மயிலாடுதுறை சிதம்பரம், கடலூர் பக்கங்களில் பொதுவாக இந்தப் பொடியை குழம்பில் உபயோகப்படுத்துவார்கள். சாம்பார், புளிக்குழம்பு என்று எல்லாவற்றுக்கும் இந்தப் பொடி தான். ஊருக்கு ஊர் பொருள்களின் விகிதங்கள் மாறுபட்டிருக்கும். தேவையான பொருட்கள் தனியா- ஒன்றரை கிலோ வற்றல் மிளகாய்- அரை கிலோ துவரம்பருப்பு- கால் கிலோ கடலைப் பருப்பு- 100 கிராம் மிளகு-50 கிராம் சீரகம்- 50 கிராம் வெந்தயம்- 1 மேசைக்கரண்டி அரிசி- 1 மேசைக்கரண்டி சோம்பு- 1 மேசைக்கரண்டி செய்முறை அனைத்துப்பொருள்களையும் தனித்தனியே பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவும் -------------------------------------------------------------------------
ரசம் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் துவரம் பருப்பு - ½ கப் காய்ந்த மிளகாய் - 10 மிளகு - 15 சீரகம் - 1/4 கப் கருவேப்பில்லை - 10 இலை பெருங்காயம் தூள் - 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி வெந்தயம் - ½ தே.கரண்டி செய்முறை முதலில் தனியாவை கடாயில் போட்டு வறுக்கவும். பிறகு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம் போட்டு தனி தனியாக வறுத்து எடுக்கவும். கருவேப்பில்லையை கழுவி பேப்பர் டவலில் காயவைத்து சுடாக உள்ள வறுத்து வைத்துள்ள பொருட்கள் மீது போடவும். இப்பொழுது மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சீரகம், வெருங்காயம் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது ரசப்பொடி ரெடி. ரசம் வைக்கும் பொழுது இந்த பொடியினை கடைசியில் தூவி தட்டு போட்டு முடி அடுப்பினை நிறுத்தி விடவும். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். -------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் -- 5 கிராம் கொத்தமல்லி -- 10 கிராம் மிளகு -- 8 கிராம் சீரகம் -- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு -- 5 கிராம் கறிவேப்பிலை -- 2 இனுக்கு எண்ணைய் -- தேவையான அளவு பெருங்காயம் -- சிறிதளவு செய்முறை எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி. ------------------------------------------------------------------------
கறிப் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் உளுந்து - 2 கப் கடலை பருப்பு - 2 கப் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிது செய்முறை வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும் -------------------------------------------------------------------------------------
திடீர் சம்பார் பொடி
தேவையான பொருட்கள் தேவையானப் பொருட்கள் 1) காய்ந்த மிளகாய் - 25 2) தனியா - 1 கப் 3) வெந்தயம் - ஒரு மேசைகரண்டி 4) பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு செய்முறை ஒரு வெறும் வானலியில் காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், பெருங்காயம் வறுக்கவும். சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அறைக்கவும். இதை போட்டு சாம்பார் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். -------------------------------------------------------------------------
இன்ஸ்டன்ட் மசாலா டீ
வடிகட்டும் வேலை இல்லாமல், காபி போல் மசாலா டீ இன்ஸ்டன்ட் 'ஆ தயாரிக்க இது உதவும். தேவையான பொருட்கள் 1. பால் பவுடர் - 2 கப் 2. சர்க்கரை - 2 1/2 கப் 3. இன்ஸ்டன்ட் டீ தூள் - 1 1/2 கப் [Tetley or any other brand - Instant Tea Granules] 4. சுக்கு தூள் - 2 தேக்கரண்டி 5. பட்டை பொடி - 2 தேக்கரண்டி 6. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 7. ஜாதிக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி செய்முறை இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது 1 மேஜைக்கரண்டி தூள், 100 (அ) 150 மில்லி கொதிக்கும் நீர் சேர்த்தால் டீ தயார். ஒரு கப் செய்து பார்த்து ருசிக்கு தகுந்த மாதிரி பால் பவுடர், சர்க்கரை அளவுகள் மாற்றவும். ---------------------------------------------------------
இட்லி பொடி (கருப்பு உளுத்தம் பருப்பு)
இந்த பொடி மிகவும் சுவையாக இருக்கும். தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பில் செய்வதால் சுவை அதிகம். தேவையான பொருட்கள் கருப்பு உளுத்தம் பருப்பு (தோலுடன்) - 1 கப் பெருங்காயம் - ½ தே.கரண்டி காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 2 பல்( தோலுடன்) உப்பு - 1 தே.கரண்டி நல்லெண்ணெய் - 1/2 தே.கரண்டி செய்முறை முதலில் கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து தனியே வைக்கவும். அதன் பின் கொடுத்துள்ள 1/2 தே.கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பினை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும். அனைத்து பொருட்களையும் ஆறவிடவும். பின்னர் மிக்ஸியிம் வறுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு அத்துடன் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். கடைசியில் பூண்டினை சேர்த்து 30 விநாடி (Seconds) திரும்பவும் சேர்த்து அரைக்கவும். இப்பொழுது இட்லி பொடி ரெடி. இதனை நல்லெண்ணெய் உடன் கலந்து இட்லி , தோசையிற்கு கூட சாப்பிட சுவையாக இருக்கும். குறிப்பு: கடைசியில் பூண்டினை சேர்ப்பதால் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த பொடி 2 / 3 மாதங்கள் வரை கொடமால் இருக்கும். ------------------------------------------------------------
நோன்பு கஞ்சி பொடி
தேவையான பொருட்கள் சீரகம் - 50 கிராம் வெந்தயம் - 25 கிராம் சோம்பு - 25 கிராம் பட்டை -10 கிராம் கிராம்பு - 10 கிராம் ஏலக்காய் - 10 கிராம் செய்முறை மேற்கூறிய எல்லாப்பொருட்களையும் சுத்தம் செய்து காய வைத்து மிக்ஸியில் தூள் செய்து எடுக்கவும். ருசியையும் மணத்தையும் தரக்கூடிய நோன்பு கஞ்சிப்பொடி ரெடி.இப்படி திரித்து வைத்துக்கொண்டால் மாதம் முழுவதும் உபயோகிக்கலாம்.சீரகம் மற்றும் அனைத்து பொருட்களும் அரைப்பட்டு விடுவதால் கஞ்சி அருமையாக இருக்கும். குறிப்பு: கஞ்சி போடும் போது இந்த பொடியை நூறு கிராம் அரிசிக்கு 1 டீஸ்பூன் குவியலாக போடவும்.ஊறவைத்த பச்சரிசியுடன்,நான்கு அல்லது ஐந்து மடங்கு தண்ணீர் வைத்து கஞ்சிப்பொடி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அல்லது பூண்டு,வெங்காயம்,தக்காளி ,மல்லி இலை,புதினா உப்பு போட்டு வேக வைக்கவும்.வெந்தபின்பு அரை தேங்காய் பால் எடுத்து அதனை சிறிது வெங்காயம் கருவேப்பிலை தாளித்து நுரை கூடி வரவும் சேர்த்தால் சிம்பிளான சுவையான கஞ்சி ரெடி.கொஞ்சம் ஸ்பெஷலாக கஞ்சி என்றால் சிறிது பாசிப்பருப்பு,கடலைபருப்பு,கொத்துக்கறி,கேரட் ,பச்சை பட்டாணி என்று விரும்பிய பொருட்க்களை சேர்த்தும் செய்யலாம். ---------------------------------------------------------------
சத்து மாவு பொடி
தேவையான பொருட்கள் 1. கேழ்வரகு - 250 கிராம் 2. கம்பு - 250 கிராம் 3. சோளம் - 200 கிராம் 4. மக்காச்சோளம் - 200 கிராம் 5. சம்பா கோதுமை - 10 கிராம் 6. பாசி பயிறு - 10 கிராம் 7. ஜவ்வரிசி - 10 கிராம் 8. வேர்கடலை - 10 கிராம் 9. முந்திரி - 10 கிராம் 10. பாதாம் - 10 கிராம் 11. பொரிகடலை - 10 கிராம் 12. சிகப்பரிசி - 10 கிராம் 13. ஏலக்காய் - 5 செய்முறை அனைத்தையும் தனி தனியாக வறுத்து ஆறவைக்கவும். பின் மிஷினில் கொடுத்து பொடியாக்கி ஆறவைத்து கொள்ளவும். இதை 100 மில்லி பாலுக்கு 1 மேஜைக்கரண்டி வீதம் சேர்த்து கஞ்சி காய்ச்சலாம் --------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள் தனியா 3 கப் துவரம் பருப்பு ஒரு கப் சீரகம் அரை கப் மிளகு கால் கப் காய்ந்த மிளகாய் 10 செய்முறை முதலில் துவரம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மீதி உள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து போட்டு வறுத்த பிறகு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டால் கம கம ரசம் எளிதில் தயார் செய்துவிடலாம். -----------------------------------------------------------------
இட்லி பருப்புபொடி(குழந்தைக்கு)
தேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு -1கப் கடலைபருப்பு -1/2கப் துவரம்பருப்பு -1/4கப் காய்ந்தமிளகாய் -3 கறிவேப்பிலை -சிறிது உப்பு -தேவையான அளவு பெருங்காயதூள் -1ஸ்பூன் எண்ணை -1ஸ்பூன் செய்முறை வாணலியில் எண்ணை ஊற்றி மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வறுத்து அதிலேயே பருப்புகளை போட்டு பொன்னிரமாக வறுக்கவும். உப்பு,பெருங்காயதூள் சேர்த்து வறுத்து இறக்கி ஆறவிடவும். மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும். தட்டில் இட்லியுடன் பொடியை வைத்து நல்லெண்ணை ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கவும். குறிப்பு: வறுக்கும்பொழுது அடுப்பை சிம்மில் வைத்து வறுக்கவும் ----------------------------------------------------------------------
ரசப்பொடி
இந்த அளவுப்படி அரைத்தால் இரண்டு பேருக்கு சுமார் இரண்டு மாதத்திற்கு வரும். தேவையான பொருட்கள் தனியா - 2 ஆழாக்கு (250 கிராம்), துவரம் பருப்பு - 1 ஆழாக்கு, கடலைப்பருப்பு - அரை ஆழாக்கு, காய்ந்த மிளகாய் - 2 ஆழாக்கு, சீரகம் - கால் ஆழாக்கு, மிளகு - 1 ஆழாக்கு, காய்ந்த கறிவேப்பிலை - 1 ஆழாக்கு. செய்முறை எல்லா சாமான்களையும் வெய்யிலில் நன்கு காய வைத்து நறநறப்பாக அரைக்க வேண்டும். நைசாக அரைத்தால் ரசம் கொழகொழப்பாக போய்விடும் ----------------------------------------------------------------
எள்ளு பொடி
தேவையான பொருட்கள் எள் - 3 மேசைக்கரண்டி, உளுத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிது, உப்பு - அரை தேக்கரண்டி. செய்முறை வெறும் வாணலியில் எள்ளை வறுத்தெடுத்து கொள்ளவும். சிறிது எண்ணெய் விட்டு, மற்ற பொருட்களையும் வறுத்தெடுக்கவும். ஆறியதும், எள் தவிர மற்றெல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். கடைசியாக எள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். -------------------------------------------------------------
வேர்க்கடலை பொடி
இந்த பொடியினை பொரியல் வகைகள் செய்யும் பொழுது கடைசியில் தூவி கிளற மிகவும் அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள் வேர்க்கடலை - 1 கப் காய்ந்த மிளகாய் - 6 உப்பு - ½ தே.கரண்டி செய்முறை வேர்க்கடலையினை கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். அதன் பின் காய்ந்த மிளகாயினை போட்டு சிறிது வறுத்து வைக்கவும். வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவைக்கவும். வேர்க்கடலையின் தோலினை கையினால் தேய்த்தால் வந்துவிடும். வேர்க்கடலையின் தோலினை நீக்கிவிடவும். பின்னர் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இப்பொழுது வேர்க்கடலை பொடி ரெடி. ----------------------------------------------------
கறி மசாலா பேஸ்ட்
ரெடிமேடாக வாங்காமல் நாம் வீட்டிலேயே செய்து வைத்து உபயோகிக்கலாம்.அவசரத்திற்கு கொஞ்சம் போட்டால் நல்ல ருசியைத்தரும். தேவையான பொருட்கள் மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டேபிள்ஸ்பூன் ஒயிட் வினிகர் - 100 -150 மில்லி எண்ணெய் - 250 மில்லி (1 கப்) மல்லி விதை - 50 கிராம் சீரகம் - 1 டேபிள்ஸ்பூன் சோம்பு - 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன் கருவேப்பிலை - 2 இணுக்கு தண்ணீர் - 50 - 75 மில்லி செய்முறை முதலில் மல்லி,சீரகம்,சோம்பு,வெந்தயம்,கருவேப்பிலை லேசாக வெதுப்பி பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன்,மிளகாய்த்தூள்,மஞ்சல் தூல்,வினிகர்,தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும். ஒரு பேனில் 200 மில்லி எண்ணெய் காயவைத்து தயார் செய்த கறி மசாலா பேஸ்ட்டை பொட்டு 10 நிமிடம் கிளரவும்.தண்ணீர் வற்றி எண்ணெய் தெளிந்து மேலே வரும்.இறக்கி ஆற வைக்கவும். சுத்தம் செய்த கண்ணாடி ஜாரில் காய்ந்த ஸ்பூனால் எடுத்து போட்டு வைக்கவும்.மீதி உள்ள 50 மில்லி எண்ணெயை காய வைத்து மசாலா உள்ள ஜாரில் விடவும்.இது விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க உதவும்.இப்படி செய்வதால் பூஞ்சனம் வைக்காது.ஒரு துளி கூட ஜாரில்,ஸ்பூனில் தண்ணீர் படாதவாறு உபயோகிக்க வேண்டும்.விருப்பப்பட்டால் உப்பு சேர்க்கலாம். சுலபமாக கறி மசாலா பேஸ்ட் வீட்டிலேயே ரெடி.இதனை குழம்பு,குருமா,கறி,மசாலா வகைகளுக்கு உபயோகிக்கலாம். குறிப்பு: தேவைக்கு கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிக்கலாம்.அவசரத்திற்கு மொத்தமாக போடுவதற்கு வசதியாக இருக்கும்.ஒரு மாறுதலுக்கு இப்படி செய்து வைத்து உபயோகிக்கலாம்.இது பேச்சுலர்ஸ்க்கு மிகவும் உதவியாக இருக்கும். ------------------------------------------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி - 3
தேவையான பொருட்கள் இளசான கறிவேப்பிலை - 2 கப் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் புளி - சுண்டைக்காய் அளவு. உப்பு - தேவையான அளவு உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன் செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். -----------------------------------------------------------------------
சாம்பார் பொடி - 3
தேவையான பொருட்கள் தனியா - 3 ஆழாக்கு துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு மிளகு - ஒரு ஆழாக்கு கடலைப்பருப்பு - ஒரு ஆழாக்கு விரளி மஞ்சள் - 6 மிளகாய்வற்றல் - 5 வெந்தயம் - கால் ஆழாக்கு கடுகு - கால் ஆழாக்கு செய்முறை எல்லா சாமான்களையும் வெயிலில் தனித்தனியாக காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். காயவைத்த சாமான்களை மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த வகை பொடி எல்லா விதமான சாம்பார் வகைகளுக்கும் பயன்படுத்தலாம் ---------------------------------------------------------------------
இட்லி மிளகாய்ப் பொடி - 2
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் - 100 கிராம் உளுத்தம் பருப்பு - 100 மில்லி கடலைப்பருப்பு - 100 மில்லி பெருங்காயம் - புளியாங்கெட்டை அளவு எள்ளு - ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் - அரை தேக்கரண்டி உப்பு - தேவைகேற்ப செய்முறை வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை வறுத்து எடுத்து விட்டு, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது வாணலியில் எண்ணெய் விடாமல் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, எள்ளு முதலியவற்றை வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் மிளகாய், பருப்பு வகைகளை முதலில் பொடித்து விட்டு இறுதியில் உப்பு கலந்து பொடித்து எடுக்கவும். கறிவேப்பிலையை வாணலியில் தண்ணீர் சுண்ட வறுத்துத் தூள் செய்து தேவையானால் கலந்து கொள்ளவும். ----------------------------------------------------------------------
சாம்பார் பொடி - 1
தேவையான பொருட்கள் குண்டு மிளகாய் - 1/4 கிலோ, தனியா - 3/4 கிலோ, சீரகம் - 100 கிராம், மிளகு - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், விரளி மஞ்சள் - 100 கிராம், பச்சரிசி - 50 கிராம், செய்முறை எல்லாவற்றையும் நன்றாக வெய்யிலில் காய வைத்து மெஷினில் நைசாக அரைக்கவும் ----------------------------------------------------------------------------
கறிவேப்பிலைப் பொடி - 1
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - 50 கிராம் உளுத்தம்பருப்பு - 20 கிராம் மிளகாய் வற்றல் - 10 எண்ணெய் - சிறிதளவு செய்முறை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் இவற்றினை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். மிக்ஸியில் முதலில் மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு இரண்டையும் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதனுடன் வறுத்த கறிவேப்பிலையைச் சேர்த்து பொடி செய்யவும். விருப்பம் உள்ளவர்கள் சிறிதளவு உப்பும், பெருங்காயப் பொடியும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். சூடான சாதத்திற்கு பொடியுடன் நல்லெண்ணெய்விட்டு சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும் -------------------------------------------------------------------------------
ரசப்பொடி - 1
தேவையான பொருட்கள் மிளகாய் - 100 கிராம் மல்லி விதை - 300 கிராம் மிளகு - 50 கிராம் சீரகம் - 50 கிராம் மஞ்சள் - 10 கிராம் துவரம் பருப்பு - 250 கிராம் செய்முறை வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்துக் கொள்ளவும். மிளகாயை தனியாக இடித்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். மற்ற பொருட்களை தனியாக இடித்துத் தூளாக்கிக் கொள்ளவும். பிறகு இரண்டையும் கலந்து தகுந்த ஜாடியில் அல்லது பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதனை ஒரு மாத காலத்திற்கு உபயோகப்படுத்தலாம். நாட்கள் அதிகமாக, மணமும் ருசியும் குறையும். -----------------------------------------------------------------------
கரம் மசாலா
தேவையான பொருட்கள் மிளகாய் - 200 கிராம் தனியா - 200 கிராம் சீரகம் - 100 கிராம் கிராம்பு - 25 கிராம் பட்டை - 5 கிராம் கசகசா - 200 கிராம் செய்முறை எல்லா சாமான்களையும் தனியாக வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். புலவு வகைகள், மசாலா கறிவகைகள் செய்யும் போது இதில் கொஞ்சம் சேர்த்தால் வாசனையாக இருக்கும். --------------------------------------------------------------------------------
கரம் மசாலாப் பொடி
தேவையான பொருட்கள் சீரகம் - 400 மில்லி சோம்பு - 250 மில்லி மிளகு - 150 மில்லி பட்டை - 2 இஞ்ச் அளவுள்ள 7துண்டுகள் கிராம்பு - 80 பீஸ் ஏலக்காய் - 80 பீஸ் செய்முறை இவை அனைத்தையும் வெயிலில் சுமார் 1 மணி நேரம் காயவைத்து, பிறகு ஆலையில் கொடுத்து அரைத்து, சூடு ஆறியவுடன் காற்றுப் புகாத ஒரு பாட்டிலில்போட்டு மூடிவைத்துக்கொள்ளலாம். குறிப்பு: ஆலையில் அரைக்கும் வசதி கிடைக்காவிட்டால், ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு சூடேறும்வரை மட்டும் லேசாக வறுத்துவிட்டு, பிறகு ஆறியவுடன் மிக்ஸியில் அரைக்கலாம்.ஆனால், நன்றாக மாவு போன்று பொடிபண்ணவேண்டும். -----------------------------------------------------------------------
சாம்பார் பொடி (4)
தேவையான பொருட்கள் வரமிளகாய் -அரை கிலோ மல்லி விதை -அறுநூற்றைம்பது கிராம் துவரம் பருப்பு - நூறு கிராம் கடலைப் பருப்பு - நூறு கிராம் வெந்தயம் - பத்து கிராம் மிளகு - பத்து கிராம் கட்டி பெருங்காயம் - இருபது கிராம் விரலி மஞ்சள் - இருபது கிராம் செய்முறை மஞ்சள், பெருங்கயத்தை சிறிய கட்டிகளாகத் தட்டி வைக்கவும். (பொடித்து விட வேண்டாம்) மிளகாயை காம்பு நீக்கி வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து முதலில் பெருங்காயத்தைப் போட்டு பொரியும் வரை வறுக்கவும். பிறகு அதிலேயே மஞ்சள், மிளகு, வெந்தயம், பருப்புகள் எல்லாவற்றையும் போட்டு நிறம் மாற ஆரம்பிக்கும் வரை வறுத்து இறக்கவும். (அதிகம் சிவக்க வேண்டாம்) மல்லியை இளம் சூட்டில் நான்கு நிமிடம் வறுக்கவும். மிள்காயைப் போட்டு இளம் சூட்டில் ஐந்து நிமிடம் வறுக்கவும். எல்லாவற்றையும் சூடு ஆறும்வரை ஆற வைத்து மிஷினில் கொடுத்து அரைக்கவும். குறிப்பு: பொடி அரைக்கும் முன்னும் பின்னும் சூடு ஆறும் வரை காய வைத்தால் போதுமானது. அதிக நேரம் பரப்பி ஆற வைத்தால் வாசனை கம்மியாக உள்ளது போல் இருக்கும். கட்டிப் பெருங்காயம் சாம்பார் பொடிக்கு மிகவும் உகந்தது. இந்தப் பொடி பெருங்காயம் சேர்ப்பதால் சாம்பர், வத்தல் குழம்பு, காரக் குழம்புகளுக்கு மட்டுமே பயன் படுத்த முடியும். பொதுவாக சாம்பார் செய்து இறக்கும் முன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவலுடன் கால் டீ ஸ்பூன் மல்லி விதை (பச்சையாக) சேர்த்து அரைத்து ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து இறக்கி கடுகு, உளுந்து, தட்டிய இரண்டு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து மேலே மல்லி இலை தூவி இறுக மூடி ஐந்து நிமிடம் கழித்து திறந்து உபயோகப் படுத்திப் பாருங்கள். சுவை அலாதியாக இருக்கும். --------------------------------------------------------------------
வேப்பம்பூ பொடி
தேவையான பொருட்கள் வேப்பம்பூ - ஒரு டம்ளர் மல்லிவிதை - அரை டம்ளர் மிளகு - ஒரு தேக்கரண்டி மிளகாய் - 4 பெருங்காயம் - பட்டாணி அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை வேப்பம்பூவை வெறும் வாணலியில் இட்டு, மிதமான சூட்டில் இளஞ்சிவப்பாக வறுத்து எடுக்கவும். பிறகு மல்லிவிதை, மிளகு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றையும் போட்டு சிவக்க வறுக்கவும். இறக்குவதற்கு முன்பு கல் உப்பையும் சேர்த்து சிறிது வறுத்து இறக்கவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளவும். சாதத்துடன் எண்ணெய் விட்டுக் கலந்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் --------------------------------------------------------------------------
கறிக்குழம்பு கரம்மசாலா
தேவையான பொருட்கள் கசகசா - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு மேஜைக்கரண்டி தனியா - இரண்டு மேஜைக்கரண்டி சோம்பு - இரண்டு தேக்கரண்டி கிராம்பு - 4 பட்டை - 4 செய்முறை இவையனைத்தையும் தனிதனியாக வறுத்து ஒன்றாக பொடித்துவைத்துகொள்ளவும். கறிக்குழம்பு செய்யும் போது கடைசியில் ஆறு பல் பூண்டை நசுக்கி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி இந்த கரம் மசாலா பொடியை சேர்த்து செய்தால் குழம்பின் வாசம் மற்றும் ருசி நன்றாக இருக்கும். --------------------------------------------------------------------------------
கறிவேப்பிலை (இட்லி) பொடி
இது இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானதும் கூட! தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - 40 கொத்து கடலைப்பருப்பு - 100 மில்லி தோல் நீக்கிய உலுந்து - 100 மில்லி காய்ந்த மிளகாய் - 15 எண்ணெய் - 100 மில்லி உப்பு - 2 ஸ்பூன் செய்முறை கடலைப்பருப்பு, உலுந்து இரண்டையும் தனித்தனியாக லேசான பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை சுத்தம் செய்து எண்ணெயில் நான்கைந்து கொத்துகளாக போட்டு பொரித்தெடுக்கவும். அதே எண்ணெயில் காய்ந்த மிளகாயையும் தீயாமல் வறுத்தெடுக்கவும். அனைத்தையும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து காற்றுப்புகாத பாட்டிலில் போட்டுவைக்கவும். -------------------------------------------------------------------------
சாம்பார் பொடி
தேவையான பொருட்கள் வற்றல் - 200கிராம் கொத்தமல்லி - 50 கிராம் சீரகம் - 25 கிராம் உளுந்தம்பருப்பு - 10 கிராம் கடலை பருப்பு - 25 கிராம் துவரம் பருப்பு - 10 கிராம் புழுங்கல் அரிசி - 10 கிராம் மிளகு - 10 கிராம் வெந்தயம் - 1 தேக்கரண்டி காயம் - நெல்லிக்காய் கறிவேப்பிலை - ஒரு கொத்து மஞ்சள் - 2ஸ்பூன் உப்பு - 1 மேஜை கரண்டி செய்முறை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்னிரமாக வறுத்துமிசினில் அல்லது மிக்சியில் அரைத்து கொள்ளவும். குறிப்பு: சாம்பார் பொடியை குறைந்தது 5 மாதம் வரை உபயோகப்படுத்தலாம் ----------------------------------------------------------------------------
கரம் மசாலாப் பொடி
தேவையான பொருட்கள் கிராம்பு - 20 கிராம் பட்டை - 20 கிராம் ஏலம் - 20 கிராம் ஜாதிக்காய் - ஒன்று சீரகம் - 20 கிராம் மிளகு - 20 கிராம் தனியா - 40 கிராம் சுக்கு - 40 கிராம் செய்முறை இவையனைத்தையும் வெய்யிலில் காய வைத்து, பொடித்துக் கொள்ளவும் ------------------------------------------------------------------------------
சீரகப் பொடி
தேவையான பொருட்கள் சீரகம் -- 100 கிராம் இஞ்சி -- 50 கிராம் எலுமிச்சம் பழம் -- 15 (அ) 20 ஏலக்காய் -- 10 கிராம் (தோல் நீக்கியது) சீனா கல்கண்டு -- 100 கிராம் செய்முறை இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி 'ஜூஸ்' எடுக்கவேண்டும். ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும். சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக்கொள்ளவும்.இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும்(24 மணி நேரம்). மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊறவைக்கவேண்டும். இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ளவேண்டும். உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி / உரலில் போட்டு அரைத்து எடுக்கவும். இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும். சீரகப்பொடி தயார். குறிப்பு: வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. மேலும் பித்தம், ஏப்பம், தலை சுற்றல் போன்றவைகளும் சரிப்படும். இதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேவையான சமயத்தில் சாப்பிட வேண்டும். --------------------------------------------------------------------------------

சாம்பார் பொடி -- ( 10 பேருக்கு )

தேவையான பொருட்கள்
  • காய்ந்த மிளகாய் -- 10 கிராம்
  • கொத்தமல்லி -- 20 கிராம்
  • வெந்தயம் -- 1 டீஸ்பூன்
  • கடலை பருப்பு -- 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் -- 1 துண்டு
  • கறிவேப்பிலை -- 2 இனுக்கு
  • தேங்காய் எண்ணைய் -- தே.அ

செய்முறை

  • எண்ணையை சூடாக்கி கடலைபருப்பு மற்றும் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்த்து கிளறவும்.
  • கடலை பருப்பு சிவப்பு நிறமானதும் கொத்தமல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெந்தயம் பொரியும் போது கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கிய பின் தூளாக்கவும்.
  • இது உடனடியாக செய்யக்கூடிய சாம்பார் பொடி.
  • நல்ல ருசியான காரமான சாம்பார் பொடி.
  • ----------------------------------------------------------------------------------------

30 நாள் 30 வகை சமையல்,30 வகை கர்நாடகா சமையல் ---

காவிரி நீரின் சுவையும், கர்நாடகா சமையலின் ருசியும் என்றுமே அலாதிதான். அதிலும் பிஸிபேளா பாத், போளி போன்ற உணவு வகைகளை சாப்பிடும்போது 'இன்னும்... இன்னும்’ என்று வாயும், வயிறும் கெஞ்சும்! இந்த இணைப்பிதழில் '30 வகை கர்நாடகா சமையல்’ ரெசிபிகளை வழங்கும் சமையல் கலை நிபுணர் லஷ்மி ஸ்ரீநிவாசன்,
''வெல்லம், தேங்காய், கொப்பரை, வேர்க்கடலை, அவல், எள்... என்று கர்நாடகா சமையலில் முக்கியமாக இடம்பெறும் பொருட்களைக் கொண்டு இந்த ரெசிபிகளை தயாரித்துள்ளேன். இவற்றை செய்யத் துவங்கினால், 'அடுத்து என்ன செய்யப் போகிறாய்?’ என்று வீட்டில் இருப்பவர்கள் ஆர்வமாக உங்களைக் கேட்பார்கள்'' என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.
தேங்காய் போளி
தேவையானவை: மேல் மாவுக்கு: மைதா 200 கிராம், உப்பு, மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - 100 கிராம்.
பூரணத்துக்கு: நைஸாக துருவிய கொப்பரை - 250 கிராம், சீவிய முந்திரி - 50 கிராம், பொடி செய்த பாகு வெல்லம் - 300 கிராம், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்தூள் - சிறிதளவு, நெய், எண்ணெய் சேர்த்து - 100 கிராம்.
செய்முறை: மைதா, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு பரோட்டா மாவு மாதிரி பிசைந்து, 100 கிராம் நல்லெண்ணெயை மேலே விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். இதுதான் மேல் மாவு.
வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, துருவிய கொப்பரை, சீவிய முந்திரி சேர்த்து பூரணமாக கிளறி இறக்கவும். ஆறிய பின் ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்தூள் சேர்த்து சிறிய ஆரஞ்சு அளவு எடுத்து உருட்டவும். மேல் மாவு சிறிதளவு எடுத்து விரித்து, அதனுள் பூரணம் நிரப்பி மூடி, வாழையிலையில் வைத்து கையால் தட்டி, சூடான தவாவில் போட்டு நெய் - எண்ணெய் கலவை விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

பருப்பு போளி
தேவையானவை: மேல் மாவுக்கு: மைதா 200 கிராம், அரிசி மாவு - அரை கப், உப்பு, மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - 100 கிராம்.
பூரணம் செய்ய: மலர வெந்த துவரம்பருப்பு - 2 கப், சர்க்கரைத்தூள்- ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள், நெய் - சிறிதளவு, பூரா சர்க்கரை (அ) பொடித்த சாதாரண சர்க்கரை - சிறிதளவு.
செய்முறை: மைதா, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு பரோட்டா மாவு மாதிரி பிசைந்து, 100 கிராம் நல்லெண்ணெயை மேலே விட்டு 2 மணிநேரம் ஊறவிடவும். இதுதான் மேல் மாவு. வெந்த துவரம்பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைக்கவும். மசிந்தவுடன் சர்க்கரைத்தூள் சேர்க்கவும். வாணலியில் நெய் விட்டு துவரம்பருப்பு - சர்க்கரை கலவை சேர்த்துக் கிளறி, இறுகி வரும்போது இறக்கி, ஏலக்காய்த்துள் சேர்த்தால்... பூரணம் தயார்.
மேல் மாவு சிறிது எடுத்து, ஆரஞ்சுப் பழ அளவு துவரம்பருப்பு பூரணம் உருட்டி அதில் வைத்து மூடி, அரிசி மாவில் ஒற்றி எடுத்து. குழவியால் போளியாக இட்டு, சூடான தவாவில் போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும். போளியை தட்டில் வைத்து, நெய் விட்டு, சிறிதளவு சூடான பால் சேர்த்து, பூரா சர்க்கரை (அ) பொடித்த சர்க்கரை தூவி பரிமாறவும்.
இதை 'பேளே ஹோளிகே’ என அழைப்பர். இதை சுடும்போது  நெய்/எண்ணெய் விடுவது இல்லை.

 அக்கி ரொட்டி
தேவையானவை: பச்சரிசி மாவு - கால் கிலோ, தேங்காய் - ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), கொத்தமல்லி -  ஒரு கட்டு, பச்சை மிளகாய் - 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:  கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசையவும். ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம்  எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது. விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.

 புளிப்பு  உப்பு  கார தோசை
தேவையானவை: பச்சரிசி - ஒரு ஆழாக்கு, குண்டு உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பச்சரிசியுடன் உளுத்தம்பருப்பு, தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து ஊறவிடவும் (இரவு செய்யும் தோசைக்கு காலையிலே ஊற வைக்க வேண்டும்). புளியை தனியாக ஊற வைக்க வேண்டும். ஊறிய பொருட்களுடன் புளியின் சாறைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை புளிக்கவிடத் தேவையில்லை. தோசை வார்க்கும் முன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்க்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு  சுட்டெடுக்கவும். 

 வெங்காய கூட்டு
தேவையானவை: மலர வேகவிட்ட பாசிப்பருப்பு - ஒரு கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், பொடித்த மிளகு - சீரகம் - ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை, நெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை:  வாணலியில் நெய்யை காயவிட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்து வேக வைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து... சிறிதளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதை, சப்பாத்தி, சாதம் ஆகியவற்றுடன் பரிமாறலாம். சூடாகத்தான் பரிமாற வேண்டும். மிளகாய்க்கு பதில் மிளகு சேர்ப்பது இதன் தனிச்சிறப்பு.

 கடலைப்பருப்பு ஸ்வீட் கோசம்பரி
தேவையானவை: வேகவிட்டு, நீரை வடித்த கடலைப்பருப்பு - அரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - அரை டீஸ்பூன், பூரா சர்க்கரை (அ) பொடித்த சாதாரண சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:  வெந்த கடலைப்பருப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், நெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். பரிமாறும் முன் பூரா சர்க்கரை (அ) பொடித்த சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும் (முதலிலேயே சேர்த்தால் நீர்த்துவிடும்).

 அவல் போண்டா
தேவையானவை: தட்டை அவல் - ஒரு கப் (ஊற வைக்கவும்), வேக வைத்து, மசித்த உருளைக்கிழங்கு - ஒன்று, பச்சை மிளகாய் (நறுக்கியது) - 3, நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடிஅளவு, தயிர் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 200 கிராம், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு.
செய்முறை:  எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்று சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு கலக்கவும். இதை போண்டா சைஸில் உருட்டி, சூடான எண்ணெயில், மிதமான சூட்டில், அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும்.

 ஹுளி சொப்பு
தேவையானவை: நறுக்கிய கீரை (ஏதேனும் ஒரு வகை) - ஒரு கட்டு, கீறிய பச்சை மிளகாய் - 4, வேர்க்கடலை (வறுத்து, பொடித்தது) - ஒரு கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 10, புளிக் கரைசல் - சிறிதளவு, வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், கடுகு - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வறுத்து பொடித்த தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை: வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு, கீறிய பச்சை மிளகாய், வெங்காயம் தாளித்து... சிவந்த பின் நறுக்கிய கீரையை அலசி சேர்க்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு, வேக வைத்த துவரம்பருப்பு சேர்க்கவும். நன்கு கொதித்து வரும்போது இறக்கி... பொடித்த வேர்க்கடலை, தனியாத்தூள் சேர்த்தால்... ஹுளி சொப்பு (புளிப்புக் கீரை) தயார். ஓடும் பதத்தில் செய்யாது... கெட்டியாக, சற்று தளர்வாக செய்யவும்.

 உடுப்பி சாறு
தேவையானவை: துவரம்பருப்பு - அரை ஆழாக்கு (வேக வைத்து, 2 கப் நீர் சேர்த்து விளாவி வைக்கவும்), புளி - நெல்லிக்காய் அளவு, நறுக்கிய தக்காளி - 2, கடுகு - கால் டீஸ்பூன், சீரகம்,
மஞ்சள்தூள், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - சிறிதளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய்  - 4, துருவிய கொப்பரை - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:  வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை நெய்யில் வறுத்து பொடிக்கவும். வாணலியில் புளிக் கரைசல், நறுக்கிய தக்காளி, உப்பு,
மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு, பருப்பு நீர் சேர்க்கவும். லேசாக நுரைக்கும்போது வறுத்துப் பொடித்த மசாலாவை சேர்த்து, கொதி வரும்போது வெல்லம் சேர்க்கவும். நெய்யில் கடுகு, சீரகம், கொத்தமல்லி தாளித்து இதனுடன் சேர்த்தால்... உடுப்பி சாறு (ரசம்) உங்கள் வீட்டிலேயே தயார்!

 கோடுபள்ளி
தேவையானவை: மைதா மாவு, அரிசி மாவு, ரவை - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், சீரகம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவு, அரிசி மாவு, ரவை ஆகியவற்றுடன் தேங்காய் துருவல், சீரகம், உப்பு,  மிளகாய்த்தூள், சிறிதளவு எண்ணெய், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும், பின்னர் கலந்த மாவை சிறிதளவு எடுத்து விரல் போல உருட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு துண்டின் இரண்டு முனைகளையும் இணைத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் கோடுபள்ளி (அ) விரல் முறுக்கு தயார்.

 சிகிளி
தேவையானவை: வறுத்த வெள்ளை எள் - 100  கிராம், சீவிய வெள்ளை வெல்லம் (பாகு வெல்லம் வேண்டாம். மிக்ஸியில் ஒட்டிக் கொள்ளும்) - 50 கிராம், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:  எள், வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் நெய் சேர்த்து பிசிறி வைத்தால்... சுவையான சிகிளி (எள் ஸ்வீட் பொடி) தயார்.  
நாக சதுர்த்தி, கருட பஞ்சமி தினங்களில் விரதம் இருப்பவர்கள் விசேஷ உணவாக இதைச் சாப்பிடுவார்கள்.

 தெம்பிட்டு
தேவையானவை: பச்சிரிசி மாவு - 2 கப், பாகு வெல்லம் துருவியது (அ) பொடித்தது - ஒரு கப், வறுத்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த தேங்காய் பல், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி... நெய், பச்சரிசி மாவு, வறுத்த எள், தேங்காய் பல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இது ஒரு விரத ஸ்பெஷல் ஆகும். இதைக் கொண்டு மாவிளக்கு, அப்பம், வெல்லச் சீடை என பலவும் செய்யலாம்.

 ஹுரிகாளு
தேவையானவை: முளைவிட்ட நவதானியம் - ஒரு பாக்கெட் (200/250 கிராம் - டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், பொட்டுக்கடலை, வறுத்த அவல் இரண்டும் சேர்த்து - 50 கிராம், நீளமாக நறுக்கிய கொப்பரை துண்டுகள் - கால் கப், சீரக மிட்டாய் - 20 கிராம். உப்பு - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, மோர் மிளகாய் - 3, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:  முளைவிட்ட தானிய வகைகளை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். உப்பு, மிளகாய்த்தூள்,
மஞ்சள்தூள் மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக்கிக் கொள்ளவும். தானியத்தை இந்த விழுதில் நன்கு புரட்டி, வெயிலில் ஒரு நாள் காயவிடவும். மறுநாள் மொறுமொறுவென இருக்கும். வாணலியில் நெய்யை சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் கொப்பரைத் துண்டுகளை சிவக்க வறுத்து, காய்ந்த தானிய வகைகளுடன் சேர்க்கவும். மேலும் வறுத்த அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, சீரக மிட்டாய் சேர்த்து நன்கு கலந்து, டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்
இதை 15 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

 அவல் மிக்ஸர்
தேவையானவை: தட்டை அவல் - 2 கப், வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா கால் கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:  தட்டை அவலை வாணலியில் மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் வேர்கடலை (தோல் நீக்கியது), பொட்டுக்கடலை இரண்டையும் எண்ணெய் விடாமல் பொன் நிறமாக வறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். எண்ணெயின்றி வறுத்த அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்க்கவும். பிறகு, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சர்க்கரை சேர்த்து இறக்கவும். நன்கு கிளறி பரிமாறவும்.

 மத்தூர் வடே
தேவையானவை:  ரவை, மைதா மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், துருவிய தேங்காய் - கால் கப், வேர்க்கடலை, வெள்ளை எள் - சிறிதளவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  ரவை, மைதா, அரிசி மாவு மூன்றினையும் துருவிய தேங்காயுடன் கலந்து கொள்ளவும். கலவையில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சிறிதளவு எண்ணெய், வெள்ளை எள் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளவும். கலந்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொன்றையும் தட்டையைப் போல் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

 வேர்க்கடலை   சுக்கு பொடி
தேவையானவை: வேர்க்கடலை - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பொடித்த சுக்கு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, ஓமம் - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், ஓமம், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துப் பொடித்து, அதனுடன் சுக்குத்தூள் கலந்து வைக்கவும். இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். பொரியல் வகைகளுக்கும் மேல் பொடியாக உபயோகிக்கலாம்.

 அரிசி  தேங்காய் கஞ்சி
தேவையானவை:  புத்தம் புது அரிசி - ஒரு கப், நெய் - சிறிதளவு,  தேங்காய்ப்பால் (ஒரே பாலாக எடுக்கவும்) - 3 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை:  அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, 4 கப் நீர் சேர்த்து, உப்பு, நெய் கலந்து குக்கரில் வேகவிட்டு, 4 விசில் வந்ததும் இறக்கவும். இதை சூட்டுடன் நன்கு மசித்து, தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
ஏகாதசி விரதம் முடிந்ததும்... வயிறு, வாய் புண்ணாகாமால் இருக்க துவாதசி அன்று முதலில் இது பரிமாறப்பட்டு பின் மற்ற உணவுகள் இடம் பெறும். இதனை துவாதசி கஞ்சி என்றும் கூறுவர்.

 பதர் பேனி
தேவையானவை: மைதா - 2 கப், நெய் - கால் கப்,  எண்ணெய் - கால் கிலோ, நெய் - 100 கிராம், பூரா சக்கரை (அ) பொடித்த சக்கரை, பாதாம் பால் - தேவையான அளவு, சோடா உப்பு, உப்பு - தலா ஒரு சிட்டிகை, ரெடிமேட் பாதாம் மிக்ஸ், காய்ச்சிய பால் - சிறிதளவு.
பதர் செய்ய: அரிசி மாவு - அரை கப், நெய் - கல் கப்.
செய்முறை:  மைதா, உப்பு, சோடா உப்பு... இவற்றை 100 கிராம் நெய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பூரி மாவு போல் பிசையவும்.
அரிசி மாவை கால் கப் நெய் விட்டு பேஸ்ட் ஆக்கவும். பிசைந்த மைதா மாவை 6 அப்பளமாக இட்டு, ஒவ்வொரு அப்பளம் மீதும் அரிசி மாவு - நெய் கலவையை நன்கு பரவலாக பூசி அடுக்கி, பாய் போல் சுருட்டி, 4 ஆக நறுக்கி மீண்டும் லேசாக தேய்த்து எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும். பரிமாறும்போது மேலே பூரா சக்கரை (அ) பொடித்த சக்கரை தூவி, பாதாம் பாலை (பாதாம் மிக்ஸை காச்சிய பாலில் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்) ஊற்றி பரிமாறவும்

 புளி  மிளகு சித்தரான்னம்
தேவையானவை: வடித்த சாதம் - 2 கப், புளிக் கரைசல் - கால் கப், வெல்லம் - சிறிதளவு, வெந்தயப் பொடி - ஒரு சிட்டிகை, வறுத்த எள் பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.
வறுத்ததுப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2.
தாளிக்க: நல்லெண்ணெய் - 100 கிராம், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.  
செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி, வறுத்துப் பொடித்ததை சேர்த்து, சிறிதளவு மஞ்சள்தூள், தேவையான அளவு  உப்பை சேர்த்து, கெட்டியாக காய்ச்சி இறக்கி, வெல்லம் சேர்த்து எடுத்து வைக்கவும். இதுதான் புளிக் காய்ச்சல். சாதத்தில் சிறிதளவு மஞ்சள்தூள், நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறி ஆறவிட்டு வேண்டிய அளவு புளிக் காய்ச்சலை சேர்த்துக் கிளறி, மேலே எள் பொடி, வெந்தயப் பொடி தூவி கலந்தால்...  புளி - மிளகு சித்தரான்னம் தயார். இதை பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.

 சிவப்பு பூசணிக்காய் தயிர் சட்னி
தேவையானவை: வேக வைத்து மசித்த சிவப்பு பூசணி - ஒரு கப், கெட்டித் தயிர் - அரை கப், கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், கொத்தமல்லி - தாளிக்க தேவையான அளவு, உப்பு, சர்க்கரை - சிறிதளவு,
அரைக்க: கடுகு - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் மூடி, பச்சை மிளகாய் - ஒன்று.
செய்முறை: தயிரைக் கடைந்து உப்பு, சர்க்கரை, மசித்த பூசணியை சேர்க்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து தயிர் கலவையில் சேர்த்து... எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள், கொத்தமல்லி தாளித்து சேர்த்துக் கலக்கவும்.

 சௌசௌ காராபாத்
தேவையானவை: வடித்த பச்சரிசி சாதம் - 2 கப், சௌசௌ - 2 (நறுக்கி, வதக்கவும்), கடுகு - சிறிதளவு, நெய் - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - சிறிதளவு.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, பட்டை, லவங்கம் தலா - ஒன்று, கொப்பரை - 2 டேபிள்ஸ்பூன்,
செய்முறை: வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை பொடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை காயவிட்டு கடுகு தாளிக்கவும். வதக்கிய சௌசௌ, பச்சரிசி சாதம், உப்பு சேர்த்து, வறுத்துப் பொடித்த பொடியைத் தூவி நன்கு கிளறி இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லியை மேலே  தூவவும்.

 தேங்காய்  தனியா ஆமவடை
தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய கொப்பரை (அ) தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தலா - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு (உருவியது), அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், சீரகம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 200 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:  கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி ஊற வைத்து தண்ணீர் வடித்து... உப்பு, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, மாவை வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

 மாம்பழ கொத்சு
தேவையானவை: மீடியமாக பழுத்த மாம்பழம் - ஒன்று, புளிக் கரைசல் (நீர்க்க இருக்க வேண்டும்) - கால் கப், வெல்லம் (விரும்பினால்) - சிறிதளவு, மஞ்சள்தூள், கடுகு, எண்ணெய், உப்பு - சிறிதளவு.
வறுத்துப் பொடிக்க: வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, துருவிய கொப்பரை - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மாம்பழத்தை நறுக்கிக் கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, புளிக் கரைசல், உப்பு சேர்க்கவும். கொதி வந்தவுடன் மாம்பழத் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, மீண்டும் கொதி வந்தவுடன் வறுத்து பொடித்த மசாலா சேர்த்து... மேலும் ஒரு கொதி வரவிட்டு (விரும்பினால் வெல்லம் சேர்த்து), இறக்கவும்.

 ஹயக்ரீவா
தேவையானவை: வேக வைத்து மசித்த கடலைப்பருப்பு - 200 கிராம், துருவிய வெல்லம் - 250 கிராம், துருவிய கொப்பரை அல்லது தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன், வறுத்த கசகசா - ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரி - திராட்சை - 25 கிராம், நெய் - 100 கிராம், கடலை மாவு (தேவைப்பட்டால் கரைத்துவிட) - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை:  வெல்லத்தை நீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்து இறக்கி, வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் மசித்த கடலைப்பருப்பு சேர்த்து நன்கு சேர்ந்து வரும்போது நெய் விட்டு இறக்கவும் (இட்லி மாவை விட சற்று கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கடலை மாவை கரைத்து சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்). ஒரு டீஸ்பூன் நெய்யில் கொப்பரை (அ) தேங்காய்  துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை வறுத்து சேர்க்கவும். பின்னர் வறுத்த கசகசா, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

 வெந்தய மோர்
தேவையானவை: சற்றே புளிப்பான கெட்டி மோர் - ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன், சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நறுக்கிய பச்சை மிளகாய் - 2, வறுத்த பொடித்த வெந்தயம் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: மோரில் உப்பு, மஞ்சள்தூள், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விளாவவும். கடுகு, சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை நெய்யில் 'கமகம’ என தாளித்து மோருடன் சேர்க்கவும். பரிமாறும் முன் வெந்தயப் பொடி சேர்த்துப் பரிமாறவும்.

 பிஸிபேளா பாத்
தேவையானவை: துவரம்பருப்பு - 200 கிராம், அரிசி - 100 கிராம், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம், புளி - சிறு எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைபருப்பு - ஒரு டீஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், மராட்டி மொக்கு - தலா ஒன்று, துருவிய கொப்பரை - அரை கப், காந்த மிளகாய் - 8, பெருங்காயம் - ஒரு சிறு கட்டி.
தாளிக்க: காய்ந்த மிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, முந்திரி - 50 கிராம், நெய் - 100 கிராம்.
செய்முறை:  பருப்பு, அரிசி, உப்பு, மஞ்சள்தூள், எண்ணெய் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, 600 மில்லி தண்ணீர் விட்டு வேகவிட்டு, மசித்து வைக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை பொடித்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து குக்கரில் ஊற்றி கொதிக்கவிட்டு... வெந்த துவரம்பருப்பு - அரிசி கலவையை சேர்த்துக் கொதிக்கவிட்டு, பொடித்த மசலா சேர்த்துக் கிளறி இறக்கி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, முந்திரி, மிளகாய் தாளித்து சேர்த்து... சூடாக பரிமாறவும்.
இதை சின்ன வெங்காயம், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி சேர்த்தும் செய்யலாம்.

 ரவா பூரி பாயசம்
தேவையானவை: ரவை - 100 கிராம், மைதா - 2 டேபிள்ஸ்பூன்,  பால் - ஒரு லிட்டர் (அரை லிட்டராக குறுக்கவும்), சர்க்கரை - 150 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, நெய் - சிறிதளவு, உப்பு  - ஒரு சிட்டிகை.
செய்முறை: ரவையை ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு நெய் விட்டு பிசிறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து, பூரி மாவு போல் பிசையவும். மாவை அரை மணி நேரம் மூடி வைத்து, பிறகு பூரி போல் இட்டு, எண்ணெயில் பொரித்து, நொறுக்கி வைக்கவும். குறுக்கிய பாலில் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்தபின் இறக்கி, நொறுக்கிய பூரிகளை போட்டு, முந்திரி, திராட்சை, ஏலக்காய்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
பாலுக்கு பதில் ஒரு டின் மில்க் மெய்டில் அரை டின் நீர் விட்டு இளக்கியும் செய்யலாம். இவ்வாறு செய்யும்போது சர்க்கரை சேர்க்கக் கூடாது.

 ராகி முத்தே
தேவையானவை: கேழ்வரகு மாவு - 2 கப், உடைத்த பச்சரிசி (நொய்) - ஒரு டீஸ்பூன்,  வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு கப் நீரில் அரிசி நொய்யை வேகவிட்டு... வெங்காயம், உப்பு சேர்க்கவும். ஒன்றரை கப் நீரில் கேழ்வரகு மாவைக் கரைத்து சேர்த்து நன்கு வேகவிட்டு திரண்டு வருகையில் இறக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் மேலே விட்டு மூடி, ஆறிய பின் நன்றாக கலந்து உருண்டைகள் செய்யவும்.
இது காலையில்  ஒரு ஃபுல் ப்ரேக்ஃபாஸ்ட் ஆகும். தொட்டுக்கொள்ள கெட்டி தயிர், சாம்பார் ஏற்றது. இதை பெரும்பாலான கர்நாடக வீடுகளில் செய்வார்கள். மாவை சரியாக வேகவிடவும். இல்லாட்டால், வயிற்றுப் பிரச்னை ஏற்படும்.

 வெள்ளரி  பயத்தம்பருப்பு கோசம்பரி
தேவையானவை:  ஊற வைத்த பயத்தம்பருப்பு - 100 கிராம், நறுக்கிய வெள்ளரிக்காய் - கால் கப், துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.
தாளிக்க: பச்சை மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, நெய், கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: ஊற வைத்த பருப்பை தண்ணீர் வடியவிட்டு, நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
கர்நாடக மாநிலத்தில் எல்லா பண்டிகை தினங்களிலும் இதைச் செய்வார்கள்.

 துவரம்பருப்பு பொங்கல்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், நெய் - 100 கிராம், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் (கீறியது) - 4, முந்திரி - 10, கறிவேப்பிலை  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறுதுண்டு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் நெய்யை சூடாக்கி... சீரகம், முந்திரி, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அரிசி, துவரம்பருப்பை களைந்து குக்கரில் சேர்த்து, தேவையான நீர் விட்டு, தாளித்ததை அப்படியே சேர்க்கவும். பிறகு உப்பு,
மஞ்சள்தூள் சேர்த்து குக்கரை மூடி, 3 அல்லது 4 விசில் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
இது ஒரு விரத ஸ்பெஷல் ஆகும்.


ஆச்சி கிச்சன் ராணி
கலர்ஃபுல் லட்டு
தேவையானவை:  ஆச்சி ரைஸ் சேவை பாயசம் மிக்ஸ் - 200 கிராம், பொட்டுக்கடலை மாவு - 100 கிராம், சர்க்கரைப் பொடி - 50 கிராம், காய்ச்சிய பால் - 2 டீஸ்பூன், டூட்டி ஃபுரூட்டி (2 கலர்) - 2 டீஸ்பூன், நெய் - 50 கிராம்.
செய்முறை: ஆச்சி ரைஸ் சேவை பாயசம் மிக்ஸை, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும், அதனுடன் பொட்டுக்கடலை மாவு, சர்க்கரைப் பொடி, பால், டூட்டி ஃபுரூட்டி சேர்த்து, நெய்யை காய்ச்சி ஊற்றிக் கலக்கவும். பின்னர் அதை உருண்டைகளாக பிடித்தால்... கலர்ஃபுல், ஹெல்தி லட்டு தயார்.

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX