BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

From our Blog

Tuesday, December 3, 2013

இளநீர் பாயசம்

இளநீர் பாயசம்

தேவையானவை: பால் - 4 கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், இளநீர் இளம் வழுக்கை (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப்.

செய்முறை: பாலை சர்க்கரை சேர்த்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சற்று ஆறியதும், இளநீர் வழுக்கை, தேங்காய்ப்பால் சேர்த்து குளிரவைத்துப் பரிமாறுங்கள். பிரமாதமான ருசியுடன் இருக்கும் வித்தியாசமான பாயசம் இது.

Monday, December 2, 2013

சௌசௌ பாயசம்

சௌசௌ பாயசம்

தேவையானவை: சௌசௌ - 1, சர்க்கரை - அரை கப், பால் - 2 கப், பொடித்த ஏலக்காய் - அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் - சிறிதளவு, வெனிலா எஸன்ஸ் - 2 சொட்டு, நெய் சிறிதளவு, ஆப்பிள் க்ரீன் ஃபுட் கலர் பவுடர் - ஒரு சிட்டிகை.

செய்முறை: சௌசௌவை நன்கு கழுவி, தோல் சீவி, துண்டு துண்டாக நறுக்கி நீர் விட்டு குக்கரில் வேகவிடுங்கள். வெந்தவுடன் எடுத்து, மிக்ஸியில் போட்டு மைபோல் அரைத்து, அதனுடன் ஒரு கப் பாலும், சர்க்கரையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்தவுடன் மீதி பாலையும் சேருங்கள். கடைசியில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பொடித்த ஏலம் போட்டு இறக்குங்கள். ஃபுட் கலர் போட்டு கலந்து, வெனிலா எஸன்ஸ் 2 சொட்டு விட்டு இறக்குங்கள்.

சௌசௌவை சாம்பார், கூட்டு செய்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட, இப்படி பாயசம் செய்து கொடுத்தால் அது என்ன காய் என்று தெரியாமலே விரும்பி அருந்துவார்கள். விரும்பினால் குளிரவைத்தும் கொடுக்கலாம்.

Sunday, December 1, 2013

உருளைக்கிழங்கு பாயசம்

உருளைக்கிழங்கு பாயசம்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, பால் - 3 கப், சர்க்கரை - ஒரு கப், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, முந்திரி, கிஸ்மிஸ், நெய் - தலா சிறிதளவு, ஏலக்காய்தூள், குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: உருளைக்கிழங்கை தோலுடன் நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பிறகு அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். நன்கு கொதித்தவுடன் சிறிதாக நறுக்கிய முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்துப் போடுங்கள். ஏலக்காய் பொடித்ததைப் போட்டு, கேசரி பவுடர் சிறிது சேர்த்து கிளறுங்கள். இதமான சூட்டில் பரிமாறுங்கள்.

ஆரஞ்சு பாயசம்

ஆரஞ்சு பாயசம்தேவையானவை: பால் - 4 கப், நன்கு இனிப்பான ஆரஞ்சுப்பழம் - 3, சர்க்கரை - முக்கால் கப், கண் டென்ஸ்டு மில்க் - அரை கப், ஆரஞ்சு எஸன்ஸ் - சில துளிகள், ஃபுட் கலர் ஆரஞ்சு பவுடர் - ஒரு சிட்டிகை.

செய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிடுங்கள். கலர்ஃபுல்லான இந்த பாயசம் குழந்தைகள் விரும்பி அருந்தக்கூடியது. இதை குளிர வைத்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். பிறகு, ஆரஞ்சு கலர் பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து பாலில் சேர்த்து, கண்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். ஆறியதும் எஸன்ஸ் சேர்த்துக் குளிரவையுங்கள். ஆரஞ்சுப் பழத்தை தோலுரித்து விதை நீக்கி சிறு துண்டுகளாக்குங்கள். அவற்றைப் பாலில் சேர்த்து, மேலும் குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

Saturday, November 30, 2013

நிலக்கடலை பாயசம்

நிலக்கடலை பாயசம்

தேவையானவை: நிலக்கடலை - ஒரு கப், வெல்லம் (பொடித்தது) - ஒன்றரை கப், பால் - 4 கப், ஏலக்காய் பொடித்தது - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: நிலக்கடலையை வறுத்து மிக்ஸியில் லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். பிறகு வெல்லத்தை நீர்விட்டு கரைத்து வடிகட்டி, பொடித்த கடலையுடன் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். அதனுடன் பாலையும் விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்குங்கள். பொடித்த ஏலக்காயையும் நெய்யையும் கலந்து பரிமாறவும்.
பாயசத்துக்கு சுவை கூட்ட சில குறிப்புகள்..

பாயசத்துக்கு பாலை வற்றவிடும்போது, சிறு தீயில் காய்ச்சினால் நன்றாக இருக்கும்.

பாலில் வேகவைக்கக் கூடிய அவல், அரிசி போன்றவற்றையும் தீயைக் குறைத்து வேகவிட, சுவை கூடும்.

பாலை வற்றவிடாமலேயே, பால் சுண்டும்போது வரும் நிறம் (லைட் பிங்க்) தேவை எனில், ஒரு டீஸ்பூன் சர்க்கரையை வெறும் கடாயில் அடுப்பில் வைத்து, குறைந்த தீயில் மெதுவாகக கரையவிடுங்கள். கரைந்ததும் கருகிவிடாமல் பாயசத்தில் சேருங்கள். பாலை சுண்டவைத்த எஃபெக்ட் கிடைக்கும்.

சூடாகப் பரிமாறும் பாயசங்களை விட, குளிரவைத்துப் பரிமாறும் பாயசங்களுக்கு சர்க்கரை சிறிது அதிகம் தேவை. உதாரணமாக, ஒரு கப் போடும் இடத்தில், ஒன்றேகால் கப் போடலாம்.

கண்டென்ஸ்டு மில்க் வாங்கிச் சேர்க்க முடியாதபட்சத்தில், பாலையே இன்னும் சிறிது அதிகமாகச் சேர்த்து, நன்கு வற்றக் காய்ச்சிக் கொண்டால் அதே சுவை கிடைக்கும்.

நேந்திரம் பாயசம்



தேவையானவை:
நேந்திரம் பழம் 2
பொடித்த வெல்லம் 1 1/2 கப்
தேங்காய் பால் 1 கப்
நெய் 1/4 கப்
முந்திரி பருப்பு 10
சுக்குசிறிதளவு
ஏலக்காய் 1 தேக்கரண்டி
நேந்திரம் பழம்

செய்முறை : 
நேந்திரம் பழத்தை உரித்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைக்கவேண்டும்.
ஆவியிலிருந்து எடுத்து மிக்சியில் போட்டு விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
பொடித்த வெல்லத்தை ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அரைத்த பழ விழுதை நன்கு வதக்கவேண்டும்.
பழம் வதங்கிய பிறகு வெல்ல பாகை ஊற்றி கிளறவேண்டும்.
பழமும்,பாகும் சேர்ந்து நல்ல வாசனை வரும்போது தேங்காய் பாலை ஊற்றவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் (இரண்டு நிமிடம் கழித்து) இறக்கவும்.
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
ஏலக்காய் பொடியையும் சுக்கை இடித்தும் சேர்க்கவும்.
நன்றி : http://annaimira.blogspot.com

டிப்ஸோ டிப்ஸ்

சமையல் எண்ணெயை பாட்டிலில் வடித்த பிறகு, அந்தக் கவரில் மண் நிரப்பி ஊதுபத்தியால் இருபுறமும் ஓட்டை போட்டு, மணி ப்ளான்ட், செம்பருத்தி போன்ற செடிகளை வளர்க்கலாம். ஜன்னல் ஓரங்களில் வைத்தால் அழகாக இருக்கும்.



சிறிது கற்பூரத்தையும், உப்பையும் தண்ணீரில் கரைத்து அந்தக் கரைசலை ஈக்கள் உள்ள இடத்தில் தெளித்தால் ஈயின் தொல்லை அறவே இருக்காது.



பித்தளை பாத்திரங்களை கழுவிய பிறகு தோல் சீவிய உருளைக்கிழங்கை பாத்திரத்தின் மீது தேய்த்துப் பாருங்கள். புதுசு போல மின்னும்.



மாத்திரைகளை அதன் முழு அட்டையோடு உபயோகிக்கிறீர்களா? அப்படியானால் அட்டையில் காலாவதி தேதி அச்சடிக்கப்பட்டிருக்கும் வரிசையை விட்டுவிட்டு அச்சடிக்கப்படாத வரிசை மாத்திரைகளை முதலில் உபயோகியுங்கள். காலாவதி தேதி அருகே இருக்கும் மாத்திரைகளைக் கடைசியில் சாப்பிட்டால், அட்டையில் உள்ள மாத்திரைகளின் காலாவதி தேதி எது என்பதைக் கடைசி வரை தெரிந்து கொள்ள முடியும்.



பீட்ரூட்டைத் தோலுடன் வேக வைத்து, பின்பு தோலெடுத்தால் சீக்கிரம் தோல் பிரிந்துவிடும். நறுக்குவதும் சுலபம்.



வேக வைத்த காய்கள், ஊற வைத்த அரிசி, பருப்பு வகைகள் போன்றவற்றை வடிகட்டும் போது முதலில் வடிகட்டியில் அல்லது சல்லடையில் ஒன்றிரண்டு தேக்கரண்டிகள் அல்லது ஃபோர்க்குகளை கிராஸôக வைத்துவிட்டு, பின்னர் வெந்த காய்கள் அல்லது அரிசியைப் போட்டால் ஒரு சொட்டு கூட தண்ணீர் நிற்காமல் உடனே வடிந்துவிடும்.



உடைகள் தைக்க பேப்பர் கட்டிங்குகள் வைத்தால் சீக்கிரம் கிழிந்துவிடும். சாதாரண பேப்பருக்கு பதிலாக நோட்டு புத்தகத்துக்கு போடும் லாமினேட்டட் பிரவுன் கவரை உபயோகித்தால் நீண்ட நாள்கள் கிழியாமல் இருக்கும்.



கடையிலிருந்து மிளகாய் வற்றலை வாங்கி வந்ததும் கையோடு அதன் காம்புகளைக் கிள்ளிவிட்டால், இடத்தை அடைக்காமல் இருப்பதோடு பூச்சிகளும் வராது.



மழை நாளில் சாம்பார் பொடி, ரசப்பொடி அரைக்கும்போது ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு அரைத்தால் பூஞ்சை வராது.



பழைய காட்டன் புடவைகள் அல்லது துப்பட்டாக்களை நான்காக மடித்து ஓரங்களிலும் நடுவிலும் தைத்து பாத்ரூமில் மிதியடியாகப் போடலாம். இந்த மிதியடி நீரை நன்கு உறிஞ்சும்.



பொதுவாக உள்ளாடைகள், மெத்தை விரிப்புகள், கைக்குட்டைகள் ஆகியவற்றை லைட் கலரில் வாங்குவது நல்லது. அப்போதுதான் அழுக்கு பட்டால் உடனே தெரியும். தேக ஆரோக்கியத்தையும் காக்க முடியும்.

எச்.சீதாலெட்சுமி
 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX