BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Friday, July 19, 2013

இரால் வாடா or காயல் வாடா

இரால் வாடா or காயல் வாடா 

தேவையான பொருட்கள்

  • இரால் - 20
  • அரிசி மாவு - 2 கப்
  • மாசித்தூள் – 3 மேசைக்கரண்டி
  • தேங்காய் பூ - 6 மேசைக்கரண்டி
  • வெங்காயம் - 3 பெரியது
  • மிளகாத்தூள் - 3 தேக்கரண்டி
  • பச்சைமிளகாய் – 2
  • மஞ்சள்தூள் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கருவேப்பிலை - சிறிது
  • அரைக்க: 2 காய்ந்த மிளகாய், சிறிது சோம்பு, சிறிது சீரகம்
  • எண்ணெய் - பொறிக்க 

செய்முறை

  • இராலை கழுவி சிறிது மஞ்சள் தூள் 1-தேக்கரண்டி மிளகாத்தூள்-3தேக்கரண்டி,, உப்பு சிறிதுசேர்த்து மெல்லிய தீயில் வதக்கிக் கொள்ளவும்..
  • பின் ஒரு சட்டியில் நறுக்கிய பச்சைமிளகாய்,வெங்காயம்,உப்பு,கருவேப்பிலை,மிளகாத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் ஏற்கனவே வதக்கியஇராலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், அதில் அரைக்க வேண்டிய 2-காய்ந்த மிளகாய், சிறிது சோம்பு, சிறிது சீரகம் இவற்றை அரைத்து இதனுடன் சேர்த்து, மாசித்தூளையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி வைக்கவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வெண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள், தேங்காய் பூ சேர்த்து வேகவிடவும்.பின் அரிசி மாவை போட்டு நன்கு கிளறி இறக்கி மிதமான சூட்டில் நன்கு பிசைந்துக் கொள்ளவும் இதனுடன் ஒரு கைப் பிடியளவு பழைய சோற்றினை அரைத்து சேர்த்தால் வாடா மெதுவாக இருக்கும்.
  • பின்பு  ஒரு துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து,.பின் அதன் மேல் சிறு உருண்டை அளவு மாவை வைத்து நன்கு வட்டமாக தட்ட வேண்டும். பின் அதன் மேல் வதக்கி வைத்த வெங்காய கலவையை சிறிது வைத்து இன்னொறு சிறு உருண்டை அளவு மாவை வைத்து முதலில் தட்டின மாதிரியே இந்த மாவையும் தட்டி வெங்காய கலவைக்கு மேலே வைத்து சிறிது தண்ணீர் தொட்டு நன்கு மூடிவிடவும் வாடா வெடித்து சிதறாமல் இருக்க நன்கு ஒட்டி மூட வேண்டும்.இப்போது இதன் தோற்றம் சிறிய மலைக் குன்று போல் இருக்கும்.  
  • இதே போல் வாடாவை செய்து வைத்துக் கொண்டு, எண்ணையை சூடாக்கி மிதமான தீயில் வைத்து பொறித்து எடுக்கவும்.
  • சுவையான வாடா ரெடி…
  • தூத்துக்குடி மாவட்ட காயல் பட்டிணத்தில் இந்த வாடா ரெம்பவும் பிரபலம். நோன்பு காலங்களில் மக்கள் வாடா கடைகளில் (குறிப்பாக வாடா சுடும் இடத்திலேயே கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிச் செல்வர்.

    • சென்னையில் தற்போது மண்ணடியில் மட்டும் வாடா கிடைக்கிறது. கறி கஞ்சியுடன் இதை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.



குறிப்புகள்:மெஹர் சுல்தான்

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX