BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Tuesday, June 18, 2013

உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuFt4KBlUiuGE5XWojb5cENNBFVcWyQCdbf4aRxrm3Ph5t3DtL1PAXqZyw6Wu5jlVVs9BaFq8d-l3u_grTSVxu2dsmdKgl0LYzPp-bqseG2jW5uWMFYaqPa40vKSp0nlx5I7uo9b9Skig/s400/DSCN3015.JPG
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம் (துருவியது)
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து, மசித்தது)
பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, லேசாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX